Monday 15 October 2012

“வாழ்க்கை – ஒரு முறைதான் ”



  
                               அன்று  சனி  கிழமை  சாயந்திரம்  6 மணி  இருக்கும் , marina  beachla எங்க  பாத்தாலும்  மக்கள்  கூட்டம். வயசு  வித்யாசம்  இல்லாமல்  அங்க  இருந்த  மக்கள்  அனைவரின்  முகத்திலும்  உண்மையான  சந்தோஷம் .சனி  கிழமை  சாயந்திரம்  எப்பவுமே  எல்லார்  மனசுக்குள்ளயும்  ஒரு  சின்ன  சந்தோஷத  வரவைக்கும் . அந்த  குடும்பம்  ஒவ்வொரு  வாரமும்  அந்த  பீச்சுக்கு வருவாங்க .சென்னைல  வாழ்ற  ஒரு  மிடில்  கிளாஸ்  குடும்பம் .. அந்த  குடும்ப  தலைவர்  மெட்ராஸ்  universityla தமிழ்  lectureraa இருகாரு .. அவருக்கு  ஒரு  மகன்  ஒரு  மகள் .. அவரோட  பைய்யன்  வினோத்  10th படிக்கிறான்  அந்த  வயதுக்கு  உண்டான  அணைத்து  விதமான  கனவுகளையும்  மனதிற்குள்  கொண்டவன் .. ஒவ்வொரு  வாரமும்  அங்க  வரனால  இந்த  பீச்  அவனுக்கு  ரொம்பவும்  போர்  அடிக்க  ஆரம்பிச்சிருச்சு  அதுக்கு  காரணம்  அவனோட  அப்பாதான்  அவர்  கொஞ்சம்  இல்ல  ரொம்பவே  ஸ்ட்ரிக்ட் .. அவனோட  அம்மா  அவனோட  அப்பா  அளவுக்கு  ஸ்ட்ரிக்ட்  இல்ல , ஆனா  அவர  எதிர்த்து  பேச  அவங்களுக்கும்  தெய்ரியம்  இல்ல .. அவனோட  தங்கச்சி  ரொம்பவே  சந்தோஷமா  அங்க  இருந்த  பலூன்  ஷூடிங்க  பாத்துகிட்டு  இருந்தா .அப்பா  பல்லூன்  ஷூடிங்க்னு  கேட்டா  சரின்னு  சொல்லி  அவரும்  permission குடுத்தாரு ,5 புல்லேட்ல  ரெண்டு  தரவ  மட்டும்தான்  பல்லூன  சுட்டா .வினோத்  நீயும்  சுட்ரியானு  கேட்டார் .அவன்  எதுவும்  பேசாமல்  கோவத்துடன்  அமைதியாக  வேறு  பக்கம்  நடந்து  சென்றான் .இப்ப  எதுக்கு  அவன்  அப்படி  போறான்  என்று  தன்னுடைய  மனைவிய  எரிச்சலுடன்  கேட்டார் .அவன்  10th படிக்கிறாங்க  அவன  போய்  பல்லூன்  சுட்ரியானு  கேட்டா  அவனுக்கு  கோவம்  வராதா . அதற்குள்  அப்பா  ஐஸ்  கிரீம்  என்று  அவருடைய  மகள்  கேட்க , சரி  அங்க  போய்  உட்காருங்க  நா  வந்தப்புறம்தான்  தண்ணி  கிட்ட  போகணும்  நா  போய்  ஐஸ்  கிரீம்  வாங்கிட்டு  வரேன்  என்று  சொல்லிவிட்டு  நகர்ந்தார் ..
                           இரண்டு  ஐஸ்  கிரீம்  வாங்கி  கொண்டு  ஒன்றை  வினோத்திடம்  நீட்டினார்  அவனும்  வாங்கிகொண்டு  அமைதியாக  சாப்பிட  தொடங்கினான் . இன்னொன்றை  அவருடைய  மகள்  பாய்ந்து  பிடுங்கி  சாப்பிட  தொடங்கினால் .. சாபிட்டு  முடித்த  உடன்  நான்கு  பெரும்  எழுந்து  கடலை  நோக்கி  நடந்தனர் .. ஒரு  கையில்  மகனையும்  இன்னொரு  கையில்  மகளையும்  பிடித்துகொண்டு  அலை  வருவதற்காக  நின்று  காத்து  கொண்டிருந்தனர் .. கைய  விடுப்பா  அலைதான்  வரலையே , நாம  நிக்கிற  இடத்துக்கு  தண்ணி  முட்டி  அளவுக்கு  கூட  வராது  அங்க  பாருங்க  சின்ன  பசங்கலாம்  எவ்ளோவ்  தூரம்  போறாங்கப்பா , எல்லாரும்  என்ன  பாது  சிரிகிராங்கபா  என்று  வினோத்  அவனுடைய  அப்பாவிடம்  கூறி  கையை  அவர்  பிடியில்  இருந்து  விடுவிதுகொண்டான் .. டை  அவங்களுக்கு  நீச்சல்  தெரியும்    உனக்கு  தெரியுமா ?. கடல்  எவ்ளோவ்  ஆபத்துன்னு  உனக்கு  புரியல  என்று  அவர்  தினமும்  கல்லூரியில்  நடத்துவது  போல்  இங்கும்  பாடம்  நடத்த  ஆரம்பித்தார் .அலை  கிட்ட  வந்ததும்  மறுபடியும்  தன்னுடைய மகனின்  கையை  பிடித்து  கொண்டார் .சிறிது  நேரம்  கழித்து போதும்  கெளம்பலாம்னு  சொன்னதும்  அவருடைய  மகள்  இன்னும்  கொஞ்ச  நேரம்  இருக்கலாம்னு  அடம்  பிடித்தால் .சிறிது  நேரம்  இருந்துவிட்டு  பீச்சில்  இருந்து  கிளம்பினர் .அங்கு  நாலாபக்கமும்  ஓடி  கொண்டிருந்த  குதிரைகளை  பார்த்து  விட்டு  அதில்  போக  வேண்டும்  என்று  கேட்டால் .வினோத்  சிரிப்புடன்  அவளிடம்  அதுகெல்லாம்  வாய்ப்பே  இல்ல  இதனை  வருஷமா  எத்தன  வாட்டி நா  கேட்டிருப்பேன்  அப்பாக்கு  குதிரைனா  பயம் , ஒழுங்கா  வாயமூடிகிட்டு  வா  என்று  சொல்லிவிட்டு  சிரித்தான்  அதை  கேட்ட  அவனுடைய அம்மாவும்  சிரித்துவிட்டார் . இதை  கேட்ட  அவனுடைய  அப்பா  சீக்கிரம்  நடங்க  லடே  ஆக ஆக பஸ்  கூடமைடும்  பேசாம  நடங்க  என்று  அவர்களை  பார்த்து  கூறிவிட்டு  தன்னுடைய  மகளை  தூக்கி  கொண்டு  வேகமாக   நடக்க  தொடங்கினார் .
                          பிறகு  ஒரு  நாள்  ரோட்டில்  வினோத்தும்  செல்வாவும்  ஷட்டல்  கார்க்  விளையாடி  கொண்டிருந்தனர் .. செல்வா  வினோத்தின்  நெருங்கிய  நண்பன்  வினோத் வீட்டிற்கு  பக்கத்துக்கு  வீடுதான்  செல்வாவின்  வீடு .. சிறு  வயதில்  இருந்து  ஒன்றாகவே  வளந்தார்கள் .. அப்ப அப்ப சண்ட  போட்டுக்குவாங்க  அப்றம் கொஞ்ச  நாள்ல  மறுபடியும்  அவங்களே  ஒன்னு  செந்துகுவாங்க .. டே 10thla 80% மேல  வாங்குனா  எங்க  அப்பா  பைக்  வாங்கி  தரேன்னு  சொல்லி  இருக்காருடா  நீ  உங்க  வீட்ல  கேட்டியா  என்று  ஷட்டல்  விளையாடி  கொண்டே  செல்வா  வினோத்திடம்  கேட்டான் .. இல்ல  டா  இனிமேல்தான்  கேட்கணும்  ஆனா  அவரு  எப்டியும்  வாங்கி  தர  மாட்டாரு  என்றான்  வினோத்  .. ம்ம்ம் டேய்  ப்ரியா  வாராடா டக்குனு  திரும்பி  பாக்காத  என்றான்  செல்வா .. சரி  சரி  நீ  கார்க எனக்கு  பின்னாடி  தூரமா  அடிடா என்றான்  வினோத் .. செல்வாவும்  அதே  போல்  வினோத்திற்கு  பின்னால்  தூரமாக  அடிதான்  கார்கை எடுப்பது  போல்  திரும்பி  வினோத்தும்  அவளை  பார்த்தான் .. செல்வாவை  பார்த்து  சிறிது  விட்டு  கார்கை  செல்வா  விடம்  அடிதான்  வினோத் .. அவள்  கிட்ட  வந்தவுடன்  மச்சான்  நல்லா  இருக்கியா  என்று  சத்தமாக  வினோத்திடம்   கேட்பது  போல் சத்தமாக  கேட்டான்  செல்வா .. செமையா  இருக்கேன்  மச்சி  பாத்தா தெரியலையா  நீ  எப்டி  இருக்க  மச்சி  என்று  வினோத்தும்  சத்தமாக  செல்வாவிடம்  கேட்டான் .. ப்ரியா  இவர்குலடந்தான்  ஸ்கூலில்  படிக்கிறாள் , அவளை  பார்க்கும்  போதெல்லாம்  இப்படி  இவர்கள்  ஜாடை  பேசுவது  வழக்கமான   ஒன்று  அதற்காக  சில  முறை  தங்களுடைய  அப்பாகளிடமும்  ச்சூளிலும்  அடிகளும்  வாங்கி  யுள்ளனர் .. இவர்கள்  பேசுவது  கேட்காததுபோல்  அவளும்  நடந்து  சென்றால் .. அவள்  அந்த  தெரு  முனையை  தாண்டும்  வரை  ஜாடை  பேசி  கொண்டே  இருந்தனர் .. சிறிது  நேரம்  விளையாடி  விட்டு  தெரு  கடைசியில்  இருந்த  சூப்  கடைக்கு  சூப்  குடிக்க  சென்றனர் ...
             பிறகு  ஒரு  நாள்  வினோத்  அவன்  வீட்டின்  பக்கத்துக்கு  தெருவில்  இருந்த  முடி  வெட்டும்  கடையில்  முடி  வெட்ட  சென்றான் . உள்ளே  சென்றதும்  அந்த  முடி  வெட்டுபவர்  வா  பா  உட்காரு  இவருக்கு  ஷேவிங் தான்  முடுச்சுட்டு  வந்துடறேன் என்றார் .சரினா  என்று  சொல்லி  விட்டு  அங்கிருந்த  தின  தந்திய  எடுத்து  புரட்டினான் .. அப்பா  எப்படிப்பா  இருகாரு  பாத்து ரொம்ப  நாளாச்சு  என்று  வினோத்தை  பார்த்து  கேட்டபடி ஷேவிங் செய்து கொண்டிருந்தார் .. ம்ம்ம்  நல்லா  இருக்கார்னா  என்றான்  வினோத் .. கிருதா நல்லா ஷார்ப்பா கத்தி மாதிரி   விட்ருங்க  என்று  முடி  வெட்டி  கொண்டிருந்த  சிறுவன்  கூறியதை  கேட்டு  வினோத்  ஆச்சர்யத்துடன்  அவனை  பார்த்தான் .என்ன  விட  சின்ன  பயன்  அவன்லாம்  funku விடறான் கிருதா இவ்ளோவ் கீழ வக்கிறான்   நா   இன்னும்  ஓட்ட  முடி  வெட்டிக்கிட்டு  இருக்கேன் .அந்த  சிறுவனுக்கு  முடி  வெட்டி  முடித்ததும்  வினோத்  சென்று  அமர்ந்தான் .எதுவும்  கேட்காமல்  அந்த  கடைகாரரும்  முடி  வெட்ட  தொடங்கினார் .வினோத்  அவனுடைய  5 வயதிலிருந்து  இந்த  கடையில்தான்  முடி  வெட்டி  கொண்டிருக்கிறான் , அதனால்  அவர்  எதுவும்  கேட்காமல்  வழக்கம்போல்  முடி  வெட்ட  தொடங்கினார் .வினோத்  சிறு  தயக்கத்துடன்  முன்னாடி  மட்டும்  கொஞ்சம்  முடி  அதிகமா  விற்றுங்கனா  பின்னாடிலாம்  எப்பவும்  போல  பண்ணிடுங்கனா என்றான் .அந்த  கடை  காரர்  சிறிய  புன்னகையுடன்  சரிபா  என்று  சொன்னார் .. இப்ப  நீ  10thla?.. ஆமா  என்று  தலை  அசைத்தேன் .. அடுத்து  கிருதாவை  சரி  செய்ய  ப்ளேடை  பொருத்தினார் .. அண்ணா  கிருதா  கொஞ்சம்  சார்பா  கீழ  இறங்குற  மாதிரி  விடுங்கனா  என்றான்  வினோத் .. சிறு  வயதில்  ப்ளேடை  பொருத்தி  கிருதாவை  சரி  செய்ய  வரும்போது  வேணாம்  என்று  அழுது  ஓடியவன்  இப்பொழுது  இப்படி  பேசுவதை  கேட்டு  அவருக்கு  சிரிப்புதான்  வந்தது .பசங்க  ரொம்ப  சீக்கிரம்   வளந்துடுறாங்க  என்று  மனதிற்குள்  நினைத்தார் .முடிவெட்டி  முடித்தவுடன்  50rubaai தந்தான் .சரிபா  அப்பாவ  கேட்டேன்னு  சொல்லு .சரினா  என்று  கூறிவிட்டு  சென்றான் .
                   வினோத்தின்  தந்தை  ஹாலில்  உட்காந்து  tv பார்த்து  கொண்டிருந்தார் .. வினோத்  தலையை  குனிந்து  கொண்டு  அம்மா  துண்டு  எங்க   இருக்கு  என்றான் .. ஹால்ல  cupboardla இருக்கு  பாரு    என்று  அவனுடைய  அம்மா  கிட்செனில்  இருந்து  சொன்னார் .. தலையை  குனிந்து  கொண்டே  துண்டை  எடுக்க  கப்  போர்டை  திறந்தான் .. கப்போர்ட்ல இல்லேமா  என்று  கத்தினான் .. டேய்  இந்தா  துண்டு  என்று  தன்னுடைய  தோளில் இருந்த  துண்டை  நீட்டினார்  வினோத்தின்  தந்தை ..ச்ச   செத்தேன்  என்று  நினைத்து  கொண்டு   தலையை  குனிந்து  கொண்டே  அவரிடம்  துண்டை  வாங்க  சென்றான்  வினோத் .. டை  என்னடா  முன்னாடி  இவ்ளோவ் முடி  விட்டுருக்க  எந்த  கடைக்கு  முடி  வெட்ட  போன ? தலைய  நிமிந்து  பாரு  டா என்று  கத்தினார் .. வினோத்  துண்டை  வாங்கி  கொண்டு  தலையை  நிமிர்த்தாமல்  மொட்டையே  அடுச்சுட்டு வந்தாலும்  உங்களுக்கு  முடி  அதிகமா  இருக்க  மாதிரிதான் உனக்கு  தெரியும்பா   என்று  பாத்  ரூமை  நோக்கி  நடந்து  கொண்டே  சொன்னான்  வினோத் .. அவன்  வைத்திருந்த  கிருதாவை  பார்த்த  உடன்  அவருக்கு  இன்னும்  கோபம்  வந்து  விட்டது .. படிக்கிற  புள்ள  மாதிரியா  இருக்கான்  ரவுடி  மாதிரி  கிருதா  விட்டிருக்கான் .. அவர்  சொல்வது  கேட்காததுபோல்  பத்ரூம்குள்  குளிக்க  சென்றான் வினோத் .. அவன்  வெளியே  வந்ததும்  அந்த  கிருதாவை  சரி  செய்யாமல்  விட  மாட்டேன்  என்று  தன்னுடைய  ஷேவிங்  சேட்டை  எடுத்து  மாடி  கொண்டிருந்தார் வினோத்தின் தந்தை .. இவனுக்கே  இவ்ளோவ்  திமிர்  இருந்த  எனக்கெல்லாம்  எவ்ளோவ்  இருக்கும்  என்று  கதிகொண்டிருகும்போதே  வீட்டின்  calling bell சத்தம் கேட்டது .. வினோத்தின்  தந்தை  கதவை  திறந்தார் .. வினோத்தின்  பெரியப்பா  வந்திருந்தார் .. வாங்கணா  என்று  உள்ளே  அழைத்தார்  வினோத்தின்  தந்தை .. கிட்செனில்  இருந்து  வெளியே  வந்து  வினோத்தின்  அம்மாவும்  வரவேற்றார் .. தான்  வாங்கி  வந்த  பழங்களை  குடுத்து  விட்டு  சோபாவில்  அமர்ந்தார்  வினோத்தின்  பெரியப்பா ..
                  என்னடா  ஆச்சு  சத்தம்  தெரு  முனைக்கு   வரைக்கும்  கேக்குது ?.. அதெல்லாம்  ஒண்ணுமில்லணா  சும்மாதான்  என்றார்  வினோத்தின்  தந்தை .. எப்பவும்  போலதான்  வினோத்தோட சண்ட  போடலேன  இவருக்கு  தூக்கம்  வராது  என்றார்  வினோத்தின்  அம்மா .. வினோத்  சரியாக  பாத்ரூம்  கதவை  திறந்து  கொண்டு  வெளியே  வந்தான் .. பெரியப்பாவை  பார்த்து  ஆச்சர்யம்  கலந்த  சிரிப்புடன்  பெரியம்மா  அக்காலாம்  வரலயான்னு ? கேட்டான் .. அவளுக்கு  உடம்பு  சரி  இல்ல  அக்காக்கு  எக்ஸாம்  என்று  கூறி  விட்டு  பாக்கெட்டிலிருந்து  இரண்டு  5 star சாச்க்ளடை  எடுத்து  குடுத்தார் .. ரம்யா  எங்க  என்று  கேட்டார் ? அவ  இன்னும்  தூங்கிடுதன்  இருக்கா  என்றான்  வினோத் .. வினோத்தின்  அப்பாவும்  பெரியப்பாவும்  பூர்வீக  நிலத்தை  பற்றி  பேச  தொடங்கினர் .. வினோத்  அந்த  சாச்க்ளடை  பிரித்து  கொண்டே  ,நல்லவேள  பெரியப்பா  வந்து  நம்மள  காபாதிடாறு  என்று  நினைத்து  கொண்டு  உள்ளே  சென்றான் .. 
               அடுத்த  நாள்  ஸ்கூல்ல  history period நடந்து  கிட்டு  இருந்தது .. Louis 14 பற்றி  நடத்திக்கிட்டு  இருந்தாங்க .. கிளாசில்  ஒரு  மயான  அமைதி  பாதி  பேரு  அரை  தூக்கத்தில்  பகல்  கனவு  கண்டு  கொண்டு  இருந்தாங்க , மீதி  இருந்த  சிலர்  கவனிப்பது  போல்  நடித்து  கொண்டிருந்தனர் .. Teachera பாத்துகிட்டே , வீட்ல  பைக்க  பத்தி  கேட்டியாட  என்றான்  செல்வா .. இல்லடா  நா  இப்டி  கிருதா  விட்டதுகே  அவரு  சாமியாடிடாறு  பைகேல்லாம்  கேட்டா என்ன  வீட்ட  விட்டே  தொரதிடுவாறுடா .. சரி  ஒரு  வாட்டி  கேட்டு  பாரு  என்னதான்  சொல்றாருன்னு  பாப்போம்  என்றான்  செல்வா .. ம்ம்ம்  அதுவும்  கரெக்ட்தான்  கேட்டு  பாக்குறேன்டா  என்று  அவன்  சொல்லி  முடித்த  அடுத்த  நொடி  chock piece வினோத்தின்  நெற்றியில்  பட்டது .. செல்வாவும்  வினோத்தும்  teacherai பார்த்தனர் .. செல்வா  வினோத்  "both get out of my class for one week ".. Sorry miss என்றார்கள்  வினோத்தும்  செல்வாவும் .. வெளிய  போறிங்களா  இல்ல  பிரின்சிபால  பாகுரின்களா ? என்றார்  history டீச்சர் ..
                 செல்வாவும்  வினோத்தும்  பேசாமல்  எழுந்து  வெளியே  சென்று  நின்றனர் .. டேய்  நாயே  missa  பாதுகிடேதாண்ட  பேச  சொன்னேன்  உன்னால  பாரு  இப்ப  அந்த  ஒட்டகம்  நம்மள  வெளிய  அமுசிடா  என்றான்  செல்வா .. சரி  சரி  விடு  இதுக்கு  முன்னாடி  நீ  வெளிய  நின்னதே  இல்லையாகும்  என்றான்  வினோத் .. சரி  சரி  ஒட்டகம்  பாக்குது  கம்முனு  இரு  என்றான்  செல்வா .. 
               அன்று  இரவு  ஹாலில்  உட்காந்து  அனைவரும்  tv பார்த்து  கொண்டிருந்தனர் .. அப்பா  10thla 80%ku மேல  எடுத்தா  செல்வாவோட  அப்பா  அவனுக்கு  பைக்  வாங்கி  தரதா  சொல்லி  இருகாரு  என்று  அவன்  சொல்லி  முடிக்கும்  முன்  நா  இப்ப  உனக்கு  பைக்  வாங்கி  தருவேன்னு  கனவுல  கூட  நெனச்சு  பாதுராத  என்றார்  வினோத்தின்  தந்தை .. வினோத்  கோவத்துடன்  எழுந்து  உள்ளே  சென்றான் .. உனக்கு  எப்ப  பைக்  வாங்கி  தரணும்னு  எனக்கு  தெரியும்  15 வயசுல  பைக்  கேக்குதா .. உன்னோட  அம்மாவ  ஐஸ்  வச்சு  பைக்  வாங்கிடலாம்னு  கனவுல  கூட  நெனச்சுராத .. நீ  காலேஜ்  முடுச்சபுரம்தான்  பைக்லாம் .. இவர்  சொல்வதை  கேட்டு  வினோத்  போர்வையை  போத்தி கொண்டு  கோவத்துடன்  படுத்திருந்தான் .. 
            அடுத்த  நாள்  பள்ளியில்  நேத்து  nightu பைக்  வேணும்னு  கேட்டுட  போல  இருக்கே ? என்றான்  செல்வா .. ஆமா  ஆமா  உனக்கு  எப்டி  தெரியும்  என்றான்  வினோத் .. உங்கப்பா  கத்துன  காத்துதான்  தெருவுக்கே  கேட்டுதே .. என்ன  பண்றது  டா  உங்க  வீட்ல  எவ்ளவோ  பரவா இல்லடா  எங்க  வீட்ல  சாவடிகிறாங்க  என்றான் .. ம்ம்  விட்ரா  பாத்துக்கலாம்  திட்டு  மட்டும்தான  இல்ல  பெல்ட்  ஏதும்  எடுத்து  விலாசுனார  என்று  சிறிது  கொண்டே  கேட்டான்  செல்வா .. நாதாரி  மூட்றா என்று  வினோத்  சொல்வதற்கும்  chock piece அவனோட  நெத்தில  அடிகரதுகும்  சரியா  இருந்துச்சு .. வெளிய  நிக்கும்போதும்  பேசுறிங்களா  நாளைக்கு  வரப்ப  இந்த  questiona 10 வாட்டி  எழுதிட்டு  வரணும் .இதுக்குமேலயும்  பெசுநிங்கனா  50vaati எழுத  வைப்பேன்  என்றார்  history டீச்சர் .. அது  எப்டி  டா  உன்ன  மட்டும்  கரெக்டா  குறி  பாத்து நெத்தில  அடிக்கிறாங்க ? என்று  நக்கலாக  கேட்டான்  செல்வா . . வாய  மூட்றா  சனியனே  எல்லாம்  உன்னாலதான்  என்று  சொல்லி  விட்டு  தள்ளி  நின்றான்  வினோத் .. 
             நாட்கள்  நகர்ந்தன .. 10th public examum முடிந்தது .. 10th ரிசல்ட்  வருவதற்கு  முன்னாடி  நாள்  இரவு .. வினோத்  அவனது  அப்பாவிடம்  பைக்  வாங்கித்தாங்க  என்றான் .. அவனது  அப்பா  அவனை  ஒரு  முறை  முறைத்து  பார்த்து  விட்டு  எதுவும்  பேசாமல்  tv பார்த்து  கொண்டிருந்தார் .. அவன்  கடுப்பில்  மனசுக்குள்ள  அவனோட  அப்பாவ  திட்டி  கொண்டே  பெட்டில் பொய்  படுத்தான் .. அடுத்த  நாள்  10th ரிசல்ட்  வந்தது  இருவரும்  சென்று  ஸ்கூலில்  ரிசுல்டை   பார்த்தனர் .. வினோத்  82% செல்வா  87% வாங்கி  இருந்தார்கள் .. சாயந்திரம்  பைக்  வாங்கிடுவேன்  ரெடியா  இரு  மச்சான்  ரெண்டு  பெரும்  வெளிய  போறோம்  என்றான்  செல்வா .. சரி  டா  என்று  சிறிய  புன்னகயுடம்  சொன்னான்  வினோத் .. வினோத்தின்  அம்மா  அவனுக்கு  ஸ்வீட்  செய்து  கொடுத்தால்  ஆனால்  அவனுக்கு  அதில்  சந்தோஷமில்லை .. யாரிடமும்  பேசாமல்  அமைதியாக  படுத்திருந்தான் .. மாலை  5 மணியளவில்  horn சத்தம்  கேட்டு  கொண்டே  இருந்தது .. வினோத்  வெளியே  வந்து  பார்த்தான்  hero honda splenderil செல்வா  முகம்  முழுக்க  மகிழ்ச்சியுடன்  சீக்கிரம்  வாடா  வெளிய  போயிடு  வரலாம் .. வினோத்தும்  அவனுடன்  பைக்கில்  ஏறி  கொண்டான் .. இருவரும்  பைக்கில்  அங்கிருந்த  தெருக்களை  சுற்றி  சுற்றி  வந்தனர் .. வண்டி  எவ்ளோவ்  டா  என்றான்  வினோத் .. Second handdhaanda ஆனா  வாங்கி  ஒரு  வருஷந்தான்  ஆகுது , நல்ல  கொந்டிதிஒந்ல  இருக்கு  20000 என்றான்  செல்வா .. Oh நல்லா  இருக்குடா  second hand மாதிரியே  தெரியலடா  என்றான்  வினோத் ..
                   வண்டியை  நிறுத்தி  விட்டு  இந்தாடா  நீ  ஓட்டி பாரு  என்று  செல்வா  இறங்கி  வினோத்திடம்  வண்டியை  குடுத்து  விட்டு  பின்  சீட்டில்  அமர்ந்தான்  செல்வா .. வினோத்  வண்டியை  வேகமாக  ஓட்டினேன்  எதிர்  காற்று  அவர்கள்  இருவர்  முகத்தையும்  உரசி  கொண்டு  போனது .. வினோத்திற்கு  வண்டி  ஓட்டுவதற்கு  ரொம்பவும்  பிடித்திருந்தது .. இருவரும்  ஓஒஹ்  என்று  கத்தி கொண்டே  அந்த  தெருக்களில்  வேகமாக  சென்றனர் .. பிறகு இருவரும்  வீட்டுக்கு  சென்றனர் .. நாளைக்கு  பைக்ல  பீச்சுக்கு போலாம்டா  என்றான்  செல்வா .. ம்ம்ம்  போலாம்டா  என்று  சொல்லிவிட்டு  வினோத்  அவனுடைய  வீட்டின்  கேட்டை திறந்து  உள்ளே  சென்றான் .. வினோத்  சந்தோஷமாக  வீட்டிற்குள்  நுழைந்தான் .. அவனுடைய  அப்பா  ஹாலில்  உட்காந்து  tv பார்த்து  கொண்டிருந்தார் , எங்கடா போய் சுத்திட்டு  வர .? என்றார் .. செல்வா  வீட்ல  அவனுக்கு  10thla 83% எடுத்ததுக்கு  பைக்  வாங்கி  குடுத்திருக்காங்க  அதான்  அவன்கூட  பைக்ல  போயிடு  வந்தேன்னு  சொன்னான் .. வினோத்தின்  தந்தை  எதுவும்  பேசாமல்  tv பார்த்து  கொண்டே  இருந்தார் .. அவங்க  வீட்ல  நம்ம  வீடு  மாதிரி  இல்ல  என்றான்  வினோத் .. கொவமடைந்த  வினோத்தின்  தந்தை  என்னடா  வாய்  நீளுது , இப்ப  என்ன  உனக்கும்  பைக்  வேணுமா ?.. உனக்கு  எப்ப  என்ன  வாங்கி  தரணும்னு  எனக்கு  தெரியும்  இன்னிக்கு  நல்ல  மூட்ல  இருக்கேன்  அடி  வாங்காம  போய்டு  என்றார் .. இந்த  வயசுல  பைக்  வாங்காம  வேற  எந்த  வயசுல  வாங்கிதருவிங்க  என்னோட  எல்லா  friend வீட்லயும்  வாங்கி  தந்துடாங்க ? என்று  அவன்  சொல்லி  முடிக்கும்  முன்  பளார்  என்று  அவன்  கன்னத்தில்  அரை  விழுந்தது ,என்னடா  நானும்  பாத்துகிட்டே  இருக்கேன்  ஓவரா  பேசுற  வெட்டி  போற்றுவேன்  போடா  உள்ள  என்றார் .. கிட்செனில்  இருந்து  வந்த  வினோத்தின்  அம்மா  டை  வினோத்  அப்பா  உனக்காக  கம்ப்யூட்டர்  வாங்கி  வசிருகாருடா  பொய்  உள்ள  ரூம்ல  பாரு  என்றால் ..
                   வினோத்  அழுது  கொண்டே  எல்லாத்தயும் நீங்களே வச்சுகங்க எனக்கு  ஒரு  மண்ணும்  வேணாம்  எல்லாத்தையும்  நீங்களே  வச்சுக்கங்க என்று  கூறி  விட்டு  போய்  பெட்டில் படுத்தான் .. இன்று  அவன்  பைக்  ஓட்டும்போது  அவனுக்குள்  ஏற்பட்ட  அந்த  சந்தோஷம்  அவனை  எப்படியாச்சு  பைக்  வாங்கியே  ஆகணும்  என்று  தூண்டியது .. அடுத்து  இரண்டு  நாட்கள்  அவன்  அந்த  கம்பியுடரை  தொடவில்லை .. அவனுடைய  தங்கை  அடிகடி  கம்ப்யூட்டர்  கேம்  விளையாடினால் .. அதை  பார்க்கும்போது  அவனுக்கும்  ஆசை  வந்தது   ஆனால்  இருந்தாலும்  தன்னுடைய  அப்பாவை  பழி  வாங்க  வேண்டும்  என்பதற்காக  கம்பியுடரை  தொடாமல்  இருந்தான் .. இரண்டு  நாட்கள்  கழித்து  அவனுடைய  அப்பா  இல்லாதபோது  கம்பியுடேரை  போட்டு  விளையாடினான் .. பிறகு  தினமும்  அவனுடைய  அப்பா  ஆபீஸ்  போனதும்  கம்பியுட்டரில்  விளையாடுவான் .. இரண்டு  வாரம்  கழித்து ஒரு  நாள்  வினோத்தின்  தங்கை  கம்பியுடேரை  on செய்து  கேம்  போட்டு  தரும்படி  தன்னுடைய  தந்தையிடம்  கேட்டால் .. டேய்  வினோத்  அந்த  கம்ப்யூட்டர்  கேம்  இவளுக்கு  வச்சு  குடு  என்றார்  வினோத்தின்  அப்பா .. நா  அந்த  கம்பியுடேரை  இந்த  ஜென்மத்துல  தொட  மாட்டேன்  என்றான்  வினோத் .. நா  ஆபீஸ்  போனப்புறம்  நீ  கம்பியுடேர்ல  விளையாடுறேன்னு  உங்கம்மா  என்கிட்டே  எப்பயோ  சொல்லிட்டா  போ  போய் on பண்ணி  குடு  என்றார் .. வினோத்  தலை  குனிந்தபடி  அமைதியாக  எழுந்து  போய்  கம்பியுடேரை  on செய்தான் .. அதற்கு  பிறகு  வினோத்  அவனுடைய  அப்பா  இருக்கும்போதும்  கம்பியுட்டரில் விளையாட  தொடங்கினான் .. விடுமுறை  முடிந்தது  செல்வாவும்  வினோத்தும்  ஒரே  பள்ளியில்  சேர்ந்தனர் .. வினோத்தின்  மனதிற்குள்  பைக்  வாங்க  வேண்டும்  என்ற  ஆசை  அதிகரித்து  கொண்டே  இருந்தது .. அடிகடி  பைக்  வாங்கி  தர  சொல்லி  வீட்ல  கேட்டு  திட்டு  வாங்கி  கொண்டிருந்தான்  வினோத் .. படிப்பில்  கவனம்  குறைய  ஆரம்பித்தது .. quarterly exaamla  mathsil பெயில் ஆகினான் ..
               இந்த  மாதம்  வினோத்தின்  பிறந்த  நாள்  16 வயசு  முடிந்து  17 ஆரம்பிகிறது .. வினோத்  அவனது  அப்பாவிடம்  இந்த  birthdayku பைக்  வாங்கி  தாங்கப்பா  என்றான் .. வினோத்தின்  அப்பா  அவன்  சொல்வது  கேட்காதது  போல்  tv பார்த்து  கொண்டே  இருந்தார் .. அப்பா  govermente 18 வயசுல  லைசென்ஸ் எடுக்கலாம்னு  சொல்றாங்க , நீங்க  இப்ப  வாங்கி  குடுதிங்கனாதான்  நல்லா  ஓட்ட  பழகிபேன், அடுத்த  வருஷம்  லைசென்ஸ்  எடுகரத்துக்கு கரெக்டா  இருக்கும்  என்றான் .. இந்த  பேச்செல்லாம்  நல்லா வக்கனையா  பேசு  படிப்புல  ஒண்ணுத்தையும்  காணோம்  வேற  ஏதாவது  பேசுனா  பேசு  பைக்  பத்தி  இன்னொருவாட்டி  பேசுன்னு  பாரு  என்ன  நடக்குதுன்னு , போய்  இந்த  வாட்டியாச்சு mathsla பாஸ்  ஆகுற  வழிய  பாரு  என்றார்  வினோத்தின்  தந்தை .. வினோத்  கோபத்துடன்  வீட்டின்  கதவை  வேகமாக  சாத்திவிட்டு  வெளியே  சென்றான் ... 
             பிறகு  ஒரு  நாள் மாலை  செல்வாவும்  வினோத்தும்  தெரு  முனையில்  இருந்த  சூப்  கடையில்  நின்று  சூப்  குடித்து  கொண்டிருந்தனர் .. நேத்து  just missu daa, கடைக்கு  போயிடு  வரேன்  traffic constable பைக்க  நிறுத்த  சொல்லி  கை  காட்னான்   என்றான்  செல்வா .. அபாரம்  எப்படிடா  தப்புச்ச ? என்றான்  வினோத் .. வண்டிய  slow பண்ற  மாதிரி indicator போட்டு அவன் கிட்ட  போனேன்  அவன்  கொஞ்சம்  அசால்டா  நின்னான்  டக்குனு  acclerator குடுத்து  கட்  அடுச்சு  வேகமா  வந்துட்டேன்டா   என்றான்  செல்வா .. Oh கெத்து போ  வண்டில  pick up சரி  இல்லையே  எப்படிடா ? என்றான்  வினோத் .. வண்டிய  first gearku கொண்டு  வந்து  டக்குனு  ரிசே  பண்ணேன்டா , அங்க  பாரு  மச்சி  ப்ரியா  வரா  எப்டி  தப்புசென்னு  நேராவே  காட்டுறேன்  வா  என்றான்  செல்வா .. இருவரும்  வண்டியில்  ஏறி  உட்கான்தனர் .. அவள்  இவர்கள்  பைக்கில்  வருவதை  பார்த்து  விட்டு  பார்க்காததுபோல்  ஓரமாக  நடந்து  வந்தால் .. செல்வா  வேகமாக  அவளை  நோக்கி  வண்டியை  ஓட்டினான் ..
             அவர்கள்  வேகமாக  அவளை  நோக்கி  வருவதை  கவனித்து  அங்கேயே  நின்றால் .. அவள்  அருகில்  இடிப்பது  போல்  சென்று  கட்  அடித்து  வேறு  பக்கம்  சென்றனர் .. பயத்தில்  ப்ரியா  அம்மா  என்று  அலறினாள் .. செல்வாவும்  வினோத்தும்  ஓஹ்  என்று  கத்திகொண்டே  அவளை  திரும்பி  பார்த்து  சிரித்து விட்டு  வேகமாக  சென்றனர் .. அடுத்தநாள்  வினோத்தும்  செல்வாவும்  சூப்  கடைக்கு  சென்றனர்  இருவர்  முகமும்  வீங்கி  இருந்தது .. அந்த  சனியன்  புடிச்சவ  எங்க  வீட்ல  வந்து  சொல்லிடாட  என்றான்  வினோத் .. தெரியும்டா  எங்க  வீட்ல  சொல்லிட்டுதான்  உங்க  வீட்டுக்கு  போனாளாம்  என்றான்  செல்வா .. உங்க  வீட்ல  என்ன  மச்சி  பெல்டா  தொடபகட்டையா ? என்றான்  வினோத் .. வழக்கம்போல  தொடபகட்டதான்  உங்க  வீட்ல ?.. எங்கப்பா  பெல்டுடா  என்றான்  வினோத் .. அடுத்தவாட்டி  அவல  பாதா  வண்டில  கடலாம்  அடிக்க  கூடாதுடா  நேரா  ஏத்திரனும் என்றான்  வினோத் .. ம்ம்ம்  கவலைபடாத  மச்சான்  சீக்கிரமே  ஏதிரலாம் என்று  சிரித்து  கொண்டே  சொன்னான்  செல்வா .. 
           ஒரு  வாரம்  கழித்து ஒரு  நாள்  செல்வா  வினோத்தின்  வீட்டுக்கு  வந்தான் .. இருவரும்  வினோத்  வீட்டின்  மாடிக்கு  சென்றனர் .. செல்வா  தன்னுடைய  பாக்கெட்டில்  இருந்து  ஒரு  புத்தம்  புதிய  samsung போனை  எடுத்து  காட்டினான் .. டேய்  எப்டிடா  உங்க  வீட்ல  வாங்கி  தந்தாங்களா ? எவ்ளோவ்  ருபாய்  என்று  கேட்டு  கொண்டே  அந்த  mobilai வாங்கி பார்த்தான்  வினோத் .. எங்க  வீட்ல  கிழிச்சாங்க  ஏற்கனவே  ஏன்  பைக்க வாங்கி  தந்தோம்ணு  யோசிச்சிக்கிட்டு  இருக்காங்க , என்னோட  cousin ஒருத்தன்  பைக்  race பத்தி  சொன்னான்னு  சொல்லி  இருந்தேன்ல , நேத்து  அந்த  பைக்  racela 3rd வந்தேன்  மச்சி  5000 கேடசுசு  அதுலதான்  வாங்குனேன்  என்றான் .. ஓஹ் செமையா  இருக்குடா  என்றான்  வினோத் .. இருவரும்  மாறி  மாறி  போனில்  போட்டோ  எடுத்து  கொண்டனர் .. போன்ல  songs ஏதலையா என்றான்  வினோத் .. இல்லடா  என்றான்  செல்வா .. சரி  வா  என்னோட  கம்பியுடேர்ல  இருக்க  பாட்டுங்கள  போனுக்கு  copy பண்ணி  கேட்டு  பாக்கலாம்  என்று  கூறி  செல்வாவை  அழைத்து  கொண்டு  சென்றான்  வினோத் .. 
                அன்று  இரவு  வினோத்  ரொம்ப  நேரம்  தூங்காம  யோசித்து  கொண்டே  இருந்தான் .. எப்படியாச்சு  பைக்  வாங்கணும் அதா  வாங்கிட்டா  போன்லாம்  நானே  வாங்கிடலாம்  என்று  நினைத்தான் , நாளைக்கு  கடைசியாக  ஒரு முறை  அப்பாவிடம்  வாங்கி  தருவிங்களா  மாடிங்கலானு  கேட்கணும்  என்று  முடிவு  செய்தான் .. அடுத்த  நாள்  சனி  கிழமை  மாலை  வினோத்  குடும்பத்துடன்  பீச்சுக்கு வந்திருந்தான் .. அலை  வருவதற்காக  நான்குபேரும் நின்று  கொண்டே  இருந்தனர் .. அலை  வந்ததும்  தன்னுடைய  மகனின்  கையை  இருக்க   பிடித்து  கொண்டார் .. வினோத்  அவனுடைய  அப்பாவை  பார்த்தான்  அவர்  சந்தோஷமாக  அடுத்த அலைகாக  காத்து  கொண்டிருந்தார் .. அப்பா  கடைசியா  கேக்குறேன்  எனக்கு  எப்ப  பைக்  வாங்கி  தருவிங்க  என்று  கேட்டான் .. எப்பனு  எனக்கு  தெர்யும  நீ  கவலைபடாத  என்றார்  வினோத்தின்  தந்தை .. எனக்கு  இந்த  birthdayku வேணும் வாங்கித்தாங்க  என்றான்  வினோத் .. வந்த  இடத்துல  உத  வாங்காம  வாய  மூடிகிட்டு  இரு  என்றார்  வினோத்தின்  தந்தை .. அதெல்லாம்  எனக்கு  தெரியாதுபா  எனக்கு  இந்த  birthdayku வாங்கி  தருவிங்களா  மாடிங்களா  சொல்லுங்க  என்று  கோபத்துடன்  கேட்டான்  வினோத் .. இப்ப  எதுக்குடா  பைக்  ரோட்ல  போற  வர  பொண்ணுங்கள  இடிகிரதுகா  என்றார் .. வினோத்  எதுவும்  பேசாமல்  நின்றான் .. நீ  சொல்றதுகுலாம்  நா  ஆட  முடியாது  எனக்கு  எப்ப  வாங்கி  தரணும்னு  தெரியும்  ஒழுங்கா  நில்லு  என்றார் , அலை  அவர்கள்  மீது  பாய்ந்தது  வினோத்தின்  தந்தை  வினோத்தின்  கையை  பிடித்து  கொண்டார் ..
              வினோத்  கோபத்துடன்  கையை  உதறிவிட்டு  அழுது  கொண்டே  திரும்பி  கரையை  நோக்கி  நடக்க  தொடங்கினான் .. அவனுடைய  அம்மா  டேய்  வினோத்  இங்க  வாடா  என்று  கத்தினால்  ஆனால்  வினோத்  கோவத்துடன்  அழுது  கொண்டே  கரைய  நோக்கி  நடந்து  சென்றான் .. அன்று  இரவு  அவன்  எதுவும்  சாப்பிடவில்லை , அவனோட  அப்பா  பேசினால்  காது  கேட்காததுபோல்  அவன்  வேலையே  பார்த்து  கொண்டிருந்தான் .. ரெண்டு  நாள்  ஆனா  சரியாகிடுவான்  என்று  வினோத்தின்  தந்தையும்  பெரிதாக  எடுத்து  கொள்ளவில்லை .. 
           அடுத்தநாள்  ஸ்கூலில்  maths period நடந்தது .. என்னாச்சு  மச்சான்  சரியா  பேச  மாடிகிர  உங்கப்பா  பெல்ட்  எடுத்து  விளயாடிடாரா ? என்றான்  செல்வா .. இல்லடா  நா  என்னோட  அப்பா  கிட்ட  பேசுறதில்லடா , எத்தனவாட்டி  கேட்டாலும்  பைக்  வாங்கியே  தர  மாடிகிராறு  மச்சி  அதான்  கடுப்பா  இருக்கு .. தம்பி  சாப்டாம  இருக்குறது , பேசாம  இருகுரதுலாம்  m.g.r. காலத்து  style இப்பலாம்  நீ  இப்டி  பண்ணா சாப்பாடு மிச்சம்னு நெனச்சு விட்ருவாங்க  எதுவும்  வாங்கி  தரமாட்டாங்க  மச்சி  என்றான்  செல்வா .. நானே  வேறுபுல  இருக்கேன்  மச்சான்  கடுபெதாதடா  என்றான்  வினோத் .. அவனை  இப்படி  பார்பதற்கு  செல்வாவுக்கு  கஷ்டமாக  இருந்தது .. இப்ப  என்னடா  உனக்கு  பைக்தாண்டா  வாங்கணும்  இன்னும்  கொஞ்ச  நாள்ல  பைக்  race வரும்  first வரவனுக்கு  15000 செகண்ட்  வரவனுக்கு  10000 da.. entryku 1000 கட்டனும்  அத நா  பாத்துக்குறேன்  நீ   கவலைபடாத ,என்னோட  மாமா  வண்டிய  ஒரு  நாளைக்கு  வாங்கிக்கலாம்  நம்ம  ரெண்டு  பெரும்  first ரெண்டு  prize வாங்கிடோம்னு  வச்சுக்கோ  25000  கிடைக்கும் ,நா  எப்பவும்  வண்டிய  serviceku விடுவனே  அவர்கிட்ட  ஒரு  பல்சர்  saleku இருக்கு  மச்சி  அத  வாங்கிடலாம்  என்றான்  செல்வா .. இதை  கேட்ட  வினோத்  முகம்  முழுக்க  மகிழ்ச்சி  easy ya ஜெய்ச்சிடலாமா  மச்சான் ? என்றான்  வினோத் ..
                கொஞ்சம்  கஷ்டம்தான்  மச்சி , வா  பாத்துக்கலாம்  எவ்ளோவோ  பண்றோம் இத  பண்ண  மாட்டோமா  என்றான்  செல்வா .. வினோத்  சத்தமாக  சிறிது  விட்டான் .. வினோத்  tell the next step? என்றார்  maths சார் .. வினோத்  அப்போலோதுதான்  போர்டையே  பார்த்தான் .. Get out of the class என்றார்  maths சார் .. வினோத்  சந்தோஷமாக வெளியே  சென்று  நின்றான் .. 
            இரண்டு  வாரங்கள்  கடந்தன  ஆனால்  வினோத்  அவனுடைய  அப்பாவிடம்  மட்டும்  பேசாமலே  இருந்தான் .. ஏதோ  இரண்டு  நாளில்  சரியாகிடுவானு  நெனச்சேன்  ஆனா  இப்ப  ரெண்டு  வாரமாச்சு  ஆனா  அவன்  ஏன் என்  கூட  பேசவே  மாடிகிறானே  என்று  நினைத்தார்  வினோத்தின்  தந்தை .. 
            மச்சி  நாளைக்கு  raceடா  evening 5 மணிக்கு  ரெடியா  இரு  என்றான்  செல்வா .. ம்ம்ம்  ok da என்றான்  வினோத் .. அன்று  இரவு  வினோத்தின்  தந்தைக்கு  வெகு  நேரம்  தூக்கம்  வரவே  இல்லை .. இவன்  நல்லதுக்குதான  பண்றோம்  அதா  ஏன்  இவன்  புருஞ்சுகவே  மாடிகிறான் .. ஏற்கனவே  இவனுக்கு  படிப்புல  கவனம்  கொறஞ்சு  போச்சு  இதுல  பைக்  வேற  வாங்கி  குடுத்தா  அவன்  வாழ்க்கையே  வீனாகிடுமே .. தன்னுடைய  மகன்  வாழ்நாள்  முழுவதும்  தன்னோடு  பேசாமையே  போயிடுவானோ  என்று  நினைத்தார் .. என்ன  பண்றதுன்னு  புரியாம  இரவு  முழுவதும்  fanai பார்த்து  யோசித்து  கொண்டே  இருந்தார் .. 
           நாளைக்கு  race என்று  நினைத்து  சந்தோஷத்தில்  வினோத்துக்கு  தூக்கமே  வரவில்லை .. எப்படியாச்சு  first prize வாங்கணும் , வண்டிய  செம  வேகமா  ஓட்டனும்  படத்துல  வர  மாதிரி  பைக்கில்  பறக்க  வேண்டும்  என்றெல்லாம்  மனதிற்குள்  நினைத்து  பார்த்து  கொண்டே  இருந்தான் .. அடுத்தநாள்  மாலை  செல்வா  வினோத்தை  கூடி  கொண்டு  தன்னுடைய  மாமாவின்  பைக்கை  கடன்  வாங்க  சென்றனர் .. மாமாவின்  பைக்கை  வாங்கிகொண்டு  வினோத்தும்  செல்வாவும்  சென்றனர் .. 
                 எப்டியாச்சு  win பண்றோம்  மச்சான் .. நாளைக்கு  உன்னோட  birthdayla. அந்த  பல்சர்  பைகேதான்  மச்சான்  உனக்கு  என்னோட  gift என்றான்  செல்வா .. மனம்  முழுக்க  சந்தோஷத்துடன்  Thanks da என்றான்  வினோத் .. அந்த  raceku இருபது  பேருக்கு  மேல்  வந்திருந்தனர் .. செல்வா  அவர்களை  பார்த்து  விட்டு  போன  வாடி  first prize வாங்குனவன்  வரலடா  நாம  easyyaa வின்  பண்ணலாம்  நீ  முன்னாடி faastaa போ  நா  உனக்கு  பின்னாடியே  நம்மள  யாரும்  முந்தரதுகு  வழி விடாம  வரேன்  என்றான்  செல்வா .. ம்ம்  சரிடா  என்றான்  வினோத் .. அனைவரும்  போட்டிக்கு  தயாராக  நின்றனர் .. செல்வா  தன்னுடைய  போனில்  பாட்டை  on செய்து  வண்டியின்  தனக்  சீட்  கவரில்  வைத்தான் .. இது  எதுக்குடா  என்றான் வினோத் .. பாட்டு  கேட்டுகிட்டே  ஒட்டுனாதான்டா  நா  faastaa ஓட்டுவேன்  என்றான்  செல்வா .. போட்டி  ஆரம்பித்தது  வினோத்  வேகமாக  முன்னாடி  போயகொண்டிருந்தான் . செல்வா  அவனை  பின்  தொடர்ந்து  வந்தான் .. Traffic constable vinothai  பார்த்து  நிற்கும்படி  கை  அசைத்தார் .. வினோத்  வண்டிய  slow செய்தான்  traffic constable கிட்ட  போன  உடனே  வண்டியை  வேகமா  ஓட்டிட்டு  போனான்  வினோத் .. அந்த  traffic constable அவனை  சில  கேட்ட  வார்த்தைகளில்  திட்டிவிட்டு  இதெல்லாம்  போற  வேகத்துக்கு  எங்கயாச்சு  அடிபட்டு  அல்பாயிசுல  போக  போகுது  அப்பவும்  எங்களுக்குதான் தலைவலி  என்றார்  traffic constable.. செல்வா  traffic constabulai பார்த்ததும்  இடது  பக்கம்  இருந்த  சந்துக்குள்  போய் அடுத்த  சந்தில்  மறுபடியும்  மெயின்  ரோட்கு  வந்திடலாம்  என்று  நினைத்து  சந்துக்குள்  திரும்பினான் .. வினோத்  பின்னாடி  திரும்பி  பார்த்தான்  பின்னாடி  போட்டில  கலந்துகிட்ட  யாருமே  வரல .. எப்படியும்  நாமதான்  firstu என்று  மனதிற்குள்  நினைத்து  சந்தோஷமாக  வண்டியை  மேலும்  வேகமாக  ஓட்டினான் .. செல்வா  எங்க  போனான்  அவனையும்  காணமே  என்று  திரும்பி  பார்த்தான் ..
               திரும்பி  பார்த்து  விட்டு  முன்னே  திரும்பினான்  எதிரில்  ambulance ஒன்று  வேகமாக  அவனை மோத வந்தது ................................ 
          வினோத்தின்  வீட்டில்  போன்  அடித்தது  கிட்செனில்  இருந்து  வந்து  வினோத்தின்  அம்மா  போனை  எடுத்தால் , ஹலோ  என்றால்  அடுத்த  சில  நொடிகளில்  கதறி  அழுதபடி  கீழே  விழுந்தால் .. 
          அந்த  அம்புலன்சை  சுற்றி  மக்கள்  நின்று  கொண்டிருந்தனர் .. சனியம்  புடுச்சவனுங்க  எத்தன  வாட்டி  சொன்னாலும்  கேட்கமாட்டாங்க  இப்ப ரெண்டு  காலும்  போச்சு  திரும்ப  வருமா  என்று  புலம்பினார்  traffic constable.. அட  இவனங்குளுக்கு  இதெல்லாம்  பத்தாது  சார்  மனசுல  சூப்பர்  மேன்னு நெனப்பு , பாவம்  இவன  பெதவங்கதான்  உயிரோட  சாவாங்க  என்றார்  இன்னொரு  traffic constable.. 
வினோத்தின் அம்மா அழுதபடி ஆட்டோவில் வந்து கொண்டிருந்தால்... 
          வினோத்  முதல்  ஆளாக  வந்து  போட்டியை  வென்றான்  .. எப்படியும்  பைக்  வாங்கிடலாம்னு  மனதுக்குள்  கனவுகளுடன்  நின்று  கொண்டிருந்தான் .. என்னடா  நீ  மட்டும்தான்  வந்திருக்கு  மதவன்கலாம்  எங்க  என்று  போட்டியை  நடத்தியவர்  கேட்டார் .. எல்லாரும்  பின்னாடி  வராங்க just missnaa ambulancela அடி  பட்டு  இருப்பேன்  நல்லவேள  ambulancekaaran பிரேக்  அடுசான்  என்றான்  வினோத் .. அப்பொழுது  போட்டியை  நடத்துபவருக்கு  போன்  வந்தது , எடுத்து  பேசினார் .. அவர்  பதற்றத்துடன்  சரி  நீங்கலாம்  அங்க  இருந்து  கிளம்பிடுங்க  என்றார் .. வினோத்  எதுவும்  புரியாமல்  அவரையே  பார்த்தான் .. தம்பி  racela வந்தவன்ல  ஒருத்தனுக்கு  accident ஆகிடுசான்  சீக்கிரம்  இங்க  இருந்து  கிளம்பு , போலீஸ்  கேட்டா  race பத்தி  வாய  திறக்காத  என்று  சொல்லிவிட்டு  அவருடைய  வண்டியை  எடுத்து  கொண்டு  கிளம்பினார் .. ஒரு  வேள  செல்வாக்குதான்  accident ஆகி  இருக்குமோ  என்று  நினைத்தான் .. வினோத்  மனம்  முழுக்க  பயம்  பற்றி  கொண்டது .. வண்டியை  எடுத்து  கொண்டு  வந்த  வழியில்  மறுபடியும்  சென்றான் ..
               வினோத்  கைகள்  நடுங்கின .. கண்களில்  மரண  பயம்  இதயம்  வேகமாக  துடித்தது  வண்டியை  ஓட்ட  முடியாத  அளவுக்கு  உடம்பில்  நடுக்கம் .. ஒரு  நான்கு  வழி பாதையில்  வினோத்  கட்  அடித்து  வந்த  traffic constabulam வேறு  சில  constablesum நின்று  கொண்டிருந்தனர் .. வினோத்  பயத்தில்  அருகில்  செல்லாமல்  தூரத்தில்  நின்று  பார்த்தான் .. இரண்டு  பைக்குள்  உடைத்து  நொறுங்கிய  நிலையில்  ஓரமாக  படுக்க  வைத்திருந்தனர் .. ஒரு  பைக்கில்  no.platil no எதுவும்   இல்லாத புதிய வண்டி .. இன்னொன்று  செல்வாவின்  வண்டி  no. வினோத்தின்  கண்களில்  பயம்  கலந்த  அழுகை .. அந்த  traffic constable வண்டியில்  இருந்த  tank கவரில்  இருந்த  போனை  எடுத்து  பார்த்து  கொண்டிருந்தார் .. அருகில்  செல்ல  தெய்ரியம்  இல்லாமல்  அங்கிருந்த  போட்டி  கடையில்  போய் இங்க  accident ஆச்சாணா என்று  அழுகையை  மறைத்து  கொண்டு  கேட்டான் .. ஆமா  ஒரு  பையன்  வேகமா  வந்து  இன்னொரு  வண்டில  இடுசிடான் , ரெண்டு  பெருகும்  செம  அடி  போலைகாதுபா  பாகத்து  தெருல  இருக்க  s.k. ஹோச்பிடல்குதான்  தூக்கிட்டு  போய்  இருக்காங்க  என்றார் .. வினோத்  அடக்க  முடியாமல்  அழுது  கொண்டே  வண்டியில்  அந்த  hospitalai நோக்கி  சென்றான் .. செல்வா  வீட்டிற்கு  எப்படி  சொல்வது .. செல்வாக்கு  எதுவும்  ஆகா  கூடாது  என்று  நினைத்து  அழுது  கொண்டே  hospitalai அடைந்தான் .. அங்கிருந்த  receptionil இப்ப  ரோடு  accidentla ஒருத்தர  இங்க  கூட்டிட்டு  வந்தாங்களா  என்றான் .. ரெண்டு  பெற  admit பண்ணி  இருக்காங்க  ஒருத்தர்  first floorla icu la இருகாரு  இன்னொருத்தர்  இறந்துட்டார்  என்றால் .. வினோத்  வேகமாக  படியில்  ஏறி  first floorku சென்றான் .. Icu vil எட்டி  பார்த்தான்  செல்வா  தலை  முழுவதும்  கட்டு  போடிருந்தது .. Doctors nursegal அவனை  சுற்றி  நின்று  அவனுக்கு  treatement செய்து  கொண்டிருந்தனர் .. வினோத்துக்கு  அப்பொழுதுதான்  உயிர்  வந்தது ..
              உள்ளே  இருந்து   ஒரு  nurse வெளியே  வந்தார் .. அவனுக்கு  எப்படி  இருக்கு  என்று  கேட்டான் .. ஒரு  காலும்  ஒரு  கையும்  போய்டுச்சுபா .. உயிருக்கு  எந்த  பிரச்சனையும்  இல்ல  என்றார் .. போயடுசுனா  சரி  பண்ண  முடியாதா  என்று  கேட்டான் .. ரொம்ப  கஷ்டம்  மாதிரிதான்  தெரியுது  என்று  சொல்லி  விட்டு  சென்றால் .. வினோத்  என்ன  செய்வது  என்று  புரியாமல்  அங்கேயே  நின்று  கொண்டிருந்தான் .. செல்வாவின்  வீட்டிற்கு  போன்  பண்ணலாம்  என்று  நினைத்து  படிக்கட்டில்  கீழே  இறங்கினான்  வினோத் .. இறங்கி  நடந்த  வினோத்தின்  இடது  பக்கத்தில்  இருந்த  ரூமில்  சிலர்  அழுவதை  உணர்ந்தான்  வினோத் .. அது  அவனுடைய  அம்மாவின்  குரல் .. அது  உண்மையாக  இருக்க  கூடாது  என்று  நினைத்தபடி  திரும்பி  அந்த  ரூமை  பார்த்தான் , hospital அலறும்படி  கதறி  அழுதபடி  ரூமினுள்ளே  ஓடினான் .., வினோத்தின்  தந்தை  இறந்து  கிடந்தார்  அவனுடைய  அம்மாவும்  தங்கையும்  அழுது  கொண்டு  இருந்தனர் .. இவனை  பார்த்ததும்  வினோத்தின்  அம்மா  அவனை  பார்த்து  கதறி  அழுதால் .. அந்த  ரூமின்  மூலையில்  அமர்ந்த  படி  தன  அப்பாவை  பார்த்து  அழுது  கொண்டே  இருந்தான்  , அவனால்  தான்  காணும்  காட்சியை  உண்மை  என்று  நம்ப  முடியவில்லை . அழுதபடியே  மயக்கம்  போட்டு  விழுந்தான் .......................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................
           மூன்று  மாதங்களுக்கு  பிறகு .. அன்று  சனி  கிழமை  வினோத்  பல்சர்  பைக்கை  எடுத்து  கொண்டு  பீச்சிற்கு  சென்றான் .. 
        மூன்று  மாதங்களுக்கு  முன்பு  வினோத்தின்  பிறந்த  நாளுக்கு  முன்னாடி  நாள்  இரவு  அவனுடைய  birthdayvuku giftaaga குடுக்கலாம்  என்று  நினைத்து  பல்சர்  பைக்  வாங்கி  கொண்டு  வீட்டிற்கு  வர  வழியில்தான்  அந்த  நாள்  வலி  பாதையில்  செல்வா  வேகமாக  வந்து  இடித்ததில் வினோத்தின் தந்தை  உயிர்  இழந்தார் .. பிறகு  அவருடைய  ஞாபகமாக  அதே  பைக்கை  சரி  செய்து  ஞாபகார்த்தமாக  வைத்திருக்கிறான் . . 
                 பீச்சில்  உட்காந்து  அலைகளையே  பார்த்து  கொண்டிருந்தான் .. .........................................
                  சனிக்கிழமைகளில்  பீச்சுக்கு வரதுக்கு  என்னோட  அப்பாக்கு  ரொம்ப  பிடிக்கும் ..இன்னமும்  நல்லா  ஞாபகம்  இருக்கு  நா  கடைசியா  பிசுக்கு  வந்தப்ப  அவர்  கூட  சண்ட  போட்டு கிட்டு  இனிமேல்  அவர்  கூட  பேசவே  கூடாதுன்னு  நெனச்சேன் .. நெனச்சமாதிரியே  கடைசி  வரைக்கும்  அவர்கூட  என்னால  பேச  முடியாமையே  போய்டுச்சு .. அவர்  இருந்தப்ப  என்னோட  வாழ்க்கைய  சந்தோஷமா  வாழ  விடமாடிகிராறேனு  தோனுச்சு  இப்ப  அவர்  இல்லாம  எனக்கு  வாழ்க்கை  இருக்கானே  தெரியல .. அந்த  ஒரு  நாள்ல  எல்லாமே  மாறி  போச்சு .. அவர்  இருந்தப்ப  எவ்ளோவ்  சொந்த  காரங்க  சுத்தி  சுத்தி  வந்தாங்க  ஆனா  இந்த  மூணு  மாசத்துல  ஒருத்தன்  கூட  எங்க  வீட்ட  திரும்பி  பாக்கள.. 
       
                இனி  இந்த  உலகத்துல  என்ன  அதிசயம்  நடந்தாலும்  என்னோட  அப்பா  திரும்பி  வரமாடாறு .. அவர்  இருந்தப்ப  அவர  விட  எனக்கு  பைகேதான்  பெருசா  தெருஞ்சுசுச்சு  ஆனா  அவர்  இப்ப  இல்ல  அவர்  வாங்கி  குடுத்த  பைக்  இருக்கு  ஆனா  மனசுள்  ஒரு  துளி  சந்தோஷம்கூட  இல்ல .. இந்த  உலகம்  எவ்ளோவ்  கேவலமானதுனு  இந்த  3 மாசத்துலயே  தெருஞ்சுகிட்டேன் .. அவர்  இல்லாம  ஒவ்வொரு  நொடியும்  பயத்துல  வாழ்றேன்  அவர்  இருந்தப்ப  என்னோட  வாழ்க்கை  அழகா  இருக்கணும்னு  நெனச்சு இதே  மாதிரிதான்  அவரும்  பயந்தாரு .. 
              இதலாம்  விட  இனி  அவர்  கூட  என்னால  பேச  முடியுமா ?, அவர  தொட  முடியுமா ?, அப்பா  நீங்க  எனக்கு  எவ்ளோவ்  முக்கியம்னு  உங்ககிட்ட  சொல்லனும்னு  நெனைக்கிறேன்  ஆனா  இதெல்லாம்  இனி  முடியாது .. அவன்  கண்களில்  இருந்து  தானாக  கண்ணீர்  வந்தது .. இனிமேல  நா  யார்கிட்ட  போய் உரிமையோட  இது  வேணும்னு அது வேணும்னு  கேட்க  முடியும் , இல்ல  நா  செய்தால்  ஆனந்த  கண்ணீருடன்  என்னோட  தோள்ல தட்ட  யார்  இருக்கா .?.. அன்னகி  உன்னோட  கைய  உதறிட்டு  கோவமா  நடந்து  போனேன் .. நா  உன்னோட  பேசாம  இருந்த  அந்த  சில  வாரங்கள்  நீ  எவ்ளோவ்  கஷ்டபடிருபனு  எனக்கு  இப்பதான்  புரியுது ..
                நீ  உயிரைவிடும்  சில  வினாடிகளுக்கு  முன்னாள்  கூட  என்னை  பற்றிதான்  கவலை  படிருபாய் .. கடைசி  வரைக்கும்  நா  உன்ன  நிம்மதியாவே  வாழ  விடலையேபா.. அன்னகி  பீச்ல  மத்தவங்க  பாகுறப்பா  நீ  என்னோட  கைய  பிடிகிறத  அவமானமா  நெனச்சேன்  ஆனா  இன்னிக்கு  நீ  என்னோட  கைய  ஒரு  வாட்டியாவது  பிடிகவரமாடியானு  தவிக்கிறேன் ... ஆனால்  இன்னொரு  முறை  நீ  என்னோட  கைய  பிடிக்கிற  சந்தர்பம்  கிடைச்சா  என்  வாழ்நாள்  முழுவதும்  உன்னோட  கை  பிடில  இருந்து  நா  என்னோட  கைய  எடுக்கவே  மாட்டேன்பா .. அது  என்னமோ  தெரியல  ஒருத்தர்  உயிரோட  இருக்கும்  வரை  நமக்கு  அவங்கள  எவ்ளோவ்  பிடிக்கும்னு  நாம  காடவேமாடோம்  ஆனா  அவங்க  செதபுரம்  அவர்  கூட இன்னும்  அன்போட  வாழ்ந்து  இருக்கலாம்னு  தோணும் .. அங்கு  பீச்சில்  நடந்து  சென்ற  சிலர்  இவன்  அழுவதை  பார்த்து  விட்டு  அவனையே  திரும்பி  திரும்பி  பார்த்தனர் .. இவன்  தன்னுடைய  இரு  கண்களையும்  துடைத்து  கொண்டு  பிச்சை  விட்டு  எழுந்து  வீட்டுக்கு  சென்றான் .. 
            மூன்று  மாதம்  களைத்து  hospitalil இருந்து  discharge ஆகி  இருந்த  செல்வா  வினோத்தின்  வீட்டின்  முன்னாள்  wheeling chairil அமர்ந்திருந்தான் .. செல்வாவின்  ஒரு  காலும்  ஒரு  கையும்  உடைந்திருந்தது .. வினோத்தை  பார்த்ததும்  செல்வாவின்  இரு  கண்களிலும்  நீர்  தேங்கியுது .. வினோத்  அவனையே  பார்த்து  கொண்டிருந்தான் .. செல்வா  வினோத்தை  பார்க்க  முடியாமல்  தலை  குனிந்தான் .. வினோத்  அவன்  பக்கத்தில்  சென்று  நின்றான் .. சாரி  மச்சான்  என்று அழுதுகொண்டே   தலை  குனிந்தபடி  சொன்னான்  செல்வா .. வினோத்தின்  கண்களிலும்  கண்ணீர் .. வினோத்  செல்வாவின்  தலையில்  கை  வைத்து அவன் முகத்தை தூக்கி பார்த்தான் .. எனக்கு  தெரியாமையே  நடந்துடுசுடா  என்று  அழுதுகொண்டே  முகத்தை  நிமிர்த்து  வினோத்தை  பார்த்து  சொன்னான்  செல்வா .. வினோத்  அழுது  கொண்டே  அதா  பத்தி  பேச  வேண்டாம்  மச்சான்  வா  வீடுக்குள்ள  போலாம்  என்று  சொல்லி  செல்வாவை  வீட்டிற்குள்  wheeling chairai தள்ளி  கொண்டு  சென்றான்  வினோத் ...........................................................................................................
       "வாழ்க்கை  ஒரு  முறைதான்,  நமக்காக  இல்லாட்டியும்  நம்முடைய  நேச  உறவுகளுக்காகவும் எதிரில் வருபவனுக்கும் நம்மை போல் ஒரு குடும்பம் இருகின்றது அவர்களுக்கு அவன் தேவை என்பதையும்  உணர்ந்து  வண்டியில்  செல்லும்போது  மெதுவாகவும் பாதுகாப்புடனும்  செல்வோம் "....
                                                                             -கிஷோர் குமார் .

Tuesday 3 July 2012

" "அட போங்கடா நீங்களும் உங்க இன்ஜிநியரிங்கும்" "


அன்னகி சாயந்திரம் 6 மணி இருக்கும் என்னோட friend போன் பண்ணி ரிசல்ட் வந்துடுச்சுடா பாத்து சொல்லுனு சொன்னான்.. என்னதான் அண்ணா university மேல நம்பிக்கை  இருந்தாலும்  கொஞ்சம் பயத்தோடையே  annaa university website ஓபன்  பண்ணேன்  ஆனா  எல்லாரும்  ஒரே  நேரத்துல  ரிசல்ட் பகுரனால  website load ஆகிகிட்டே  இருந்துச்சு  அதுகுள்ள  என்னோட  இன்னொரு  friend all clear da ******* நாயேன்னு    கொஞ்சம் கெட்ட  வார்த்தைல  ஒரு  மெசேஜ்  அமுச்சிருந்தான்  அப்பதான்  எனக்கு இதய துடிப்பே சரியாச்சு  எப்டியோ  நானும்  ஒரு engineer ஆகிடேனு face bookla statuesla போட்டேன். முன்னாடி லீவ்ல இருந்தபயாச்சு யாராச்சு என்ன பண்றேன்னு கேட்டா exaam எழுதி இருக்கேன் இன்னும் ரிசல்ட் வரலேன்னு சொல்லிக்கிட்டு திருஞ்சேன் ஆனா இப்ப ரிசல்ட் வந்து ஒரு வாரம்  ஆச்சு என்ன பன்றதுனே தெரியல , போற வரவன்லாம் ஏதோ பஞ்சாயத்து t.v.ya நோன்டுரமாதிரி இன்னும் வேலைக்கு போகலையான்னு கேட்டு சாவடிகிரானுங்க. நேத்து அப்டிதான்  ஒரு  கல்யாணத்துக்கு  குடும்பத்தோட  போனோம் அப்ப  இன்னொரு  குடும்பத்த  பாத்தோம் .அந்த  குடும்பத்துல  இருக்கவங்க  பேசுறதுக்கு  எவ்ளோவோ  விஷயம்  இருக்கு  ஆனா  அதெல்லாம்  விட்டுட்டு  என்  பையனுக்கு  tcs ல  வேலை  கிடசிடுசுனு  பெருமையா  சொன்னாரு .பக்கதுல  நானும்  என்னோட  அப்பாவோட  நின்னுகிட்டு இருந்தேன் .எங்க  அப்பாவாளையும்  எதுவும்  பேச  முடியல  என்னாலையும்  எதுவும்  பேச  முடியல என்னோட  அப்பா  சின்னதா  என்ன  ஒரு  பார்வை  பாத்துட்டு  வேற  விஷயம்  பேச  ஆரம்பிசிடாறு .எங்க  நா  என்ன  பண்றேன்னு  கேட்டுடுவாங்கலோனு  அவங்க  போற  வரைக்கும்  மனசு  பயந்து  கிட்டே  இருக்கும் .எந்த  காரணமும்  இல்லாம  அந்த  french beard வச்சுகிட்டு  வெள்ளையா  broiler கோழி   மாதிரி இருக்க  tcs பையன்  மேல  உள்ள  இருந்து  அப்டி  ஒரு  கோவம்  வரும் .ஏண்டா  நீங்க  வேளைக்கு  சேருங்க  பல  லட்சம்  சம்பாருச்சு  என்ன  கருமத்தையோ  வாழ்ந்து  தொலைங்கடா  எங்ககிட்ட  ஏண்டா  சொல்றிங்க , நாங்க  என்ன  வச்சுகிட்டா  வஞ்சன  பண்றோம்  எங்களுக்கு  சேர்ந்தாபுல  நாலு  வார்த்த  கூட  englishla பேச  வராது , போன்ல  மெசேஜ்  அனுப்பும்போது  கூட  dictionary mode off pannitu  இங்கிலீஷ்  fontla தமிழ்ல எழுதியே  தமிழா  வாழ  வச்சு  கிட்டு  இருக்கோம் .சரி  இப்டி  அசிங்க  படறதுக்கு  எதாச்சு  வேலைக்குதான்  போலாம்னு  நெனச்சா  எந்த  கம்பெனிய  பாத்தாலும்  wanted b.e. Freshers skilled in java or .net nu எழுதி  இருக்கு .அந்த  coursunga படிகிரதுகு  35000 ருபாய்  ஆகுமாம் . அப்பறம்  என்ன ********** b.e நாலு  varusham  நாங்க  படுச்சோம்னு சொல்ல  மாட்டேன்  collegeku போனோம் .Maila ஓபன்  பண்ணா  apply for this job nu தினமும்  ஒரு  10 மெயில்  வருது , click பண்ணா  300rs கட்டி  online test attend பண்ணுங்கனு  சொல்றாங்க .டெஸ்ட்  எழுதி  பாஸ்  பண்ற  லெவெல்ல  இருந்தா  நா  campus interviewlaye பாஸ்  ஆகிருபனே..

அப்ப உனக்கு  என்ன  கருமந்தாண்டா  தெரியும் ,எதுவும்  theriyaadhu  ஆனா  வேலை  குடுக்க  மாட்டிகிராங்கனு கம்பெனி  காரனுங்கள  திட்டுற ,நல்லா  படுச்சு  place ஆனவங்களையும் திட்டுரனு  நீங்க  நினைக்கலாம் .அதுதாங்க  எனக்கும்  தெரியல  இன்ஜினியரிங்  படுச்சா  உடனே  வேலை  கிடைகும்னானுங்க  சரின்னு  சேர்ந்து  படுச்சேன் இப்ப  அதே நாய்ங்க இன்னும்  வேலைக்கு போகலையான்னு  கழுவி  கழுவி  ஊதுறாங்க . நம்ம  கூட  schoola பக்கத்துலையே  உட்காந்து  hotelku spelling தெரியாம  hotalnu எழுதி  டீச்சர்  கிட்ட  துப்பு  வாங்குனவன்லாம்  ரெண்டு  கம்பனில  place ஆகிட்டு  எதுல  போறதுன்னு  தெரியல  மச்சி  confusionaa இருக்கு  நீ  என்ன  சொல்ற  மச்சின்னு  கேக்குறான் .. நல்ல  வேல  அன்னிக்கு  என்  கைல கத்தி  இல்ல  இருந்திருந்தா  innerathuku  நா  புழல்  jailla சுய  சரிதை  எழுதிட்டு  இருந்திருப்பேன் .. அவன்  அப்பன்கிட்ட  காசு  இருந்துச்சு  10latcham கட்டி  பெரிய  காலேஜ்ல  சேத்து  விட்டாரு .. நம்ம  வீட்ல  படிக்கிறபுல்ல எங்க  படுசாலும் நல்லா  படிக்கும்னு  councellingla ஏதோ  ஒரு  காலேஜ்ல  சேத்து விட்டாரு .. சரி  உன்னோட  காலேஜ்ல  இருந்து  மட்டும்  பசங்க campusla place ஆகலையா   நீ  ஒழுங்கா  படிக்காம  எப்ப  பாத்தாலும்  படம்  பாத்துகிட்டு  கதை  எழுதிட்டு  இருந்தா  எப்டி  கிடைக்கும்னு  நீங்க  நினைக்கலாம்  ஆனா  interviewla H.R. சாப்டுனு குடுத்த வடை வாங்கி சாப்டதுகேல்லாம் reject பண்ணு  வாங்கனு  நா  என்ன  கனவா  கண்டேன் .. காலைல  இருந்து பையன்  wait பண்றான்  கடைசி  ஆளா  interviewku வந்திருக்கானே  வடை  சாப்டுட்டு  தெம்பா  பதில்  சொள்ளடும்னு  பாசமா  குடுதாருனு  நெனச்சு  நம்பி வாங்கி சாப்டேன் . வெளிய வந்து கேட்டா rejectednu சொல்றாங்க. ஒரு சின்ன வடை தின்னது குத்தமாங்க , ஆனா  ஒன்னு  அந்த  வடை  குடுத்தவன்  தமிழ்  நாட்டுல  எந்த ஜில்லால இருந்தாலும்  சரி  அவன்  சாவு  என்  கைலதாண்டி   என்  கைலதான்    .சரி  அதெல்லாம்  விடுங்கங்க  இப்ப  நா  என்னதான்  பண்றது   tell me?

இப்ப  எழுதினத  கதைன்னு  சொல்றதா  இல்ல  ஏதோ  நாயி  வேலை  கிடைக்காம  பொலம்பிகிட்டு  இருக்குனு  சொல்றதா .. என்ன  வேணும்னாலும்  நெனசுகங்க ஆனா  நா  என்ன  எழுதி  அமுட்சாலும்   படிகிரிங்க  பாருங்க  அதுதான்  உங்க  beauty, ஆனா  உங்களுக்கும்  இன்னும்  வேலை  கிடைக்கலன்னு  நினைக்கும்போதுதான்  மனசு  அப்டியே  லேசாகி  சந்தோஷத்துல  வானத்துல  பறக்குற  மாதிரி  இருக்கு .. நீங்களும்  என்ன  மாதிரி  வெட்டியா  உட்காந்து  tv பாத்து  கிட்டுதான்  இருபின்கன்ற நம்பிக்கைலதான்  தினமுன்  நா  நிம்மதியா  10 மணி  வரைக்கும்  தூங்க  முடியுது .. அந்த  மரியாதையா  காபாதிகிங்க  அம்புடுதான்  சொல்லுவேன் .. "இது  கதை  அல்ல  ஒரு  இன்ஜினியரிங்  பட்டதாரியின் புலம்பல் "

"என்னை போன்று படித்து முடித்துவிட்டு என்ன செய்வது என்று புரியாமல்  தவிக்கும் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு  இக்கதையை சமர்பிக்கிறேன்"

" யாராச்சு வேலை இருந்தா சொல்லுங்கபா "
-கிஷோர் குமார் .

Monday 2 July 2012

"Ada pongada neengalum unga engineeringum"





Oru kalyaanathuku kudumbathoda ponom apa innoru kudumbatha papom.Andha kudumbathula irukavangaa pesurathuku evlovo vishayam irukum aanaa adhellaam vittutu en paiyanuku tcs la velai kidachiduchunu perumayaa solvaaru.Pakathula naanum ennoda appaavoda nippen.Enga appaavaalayum edhuvum pesa mudiyaadhu ennaalayum edhuvum pesa mudiyaadhu ennoda appa chinnadhaa enna oru paarvai paathutu vera vishayam pesa aarambichiruvaaru.Enga naa enna pandrenu kettuduvaangalonu avanga pora varaikum manasu bayandhu kite irukum.Endha kaarnamum illaama andha french beard vachchukitu vellayaa broiler koli madhiri iruka tcs paiyan mela ulla irundhu apdi oru kovam varum.Yendaa neenga velaiku serunga pala latcham sambaaruchu enna karumathayo vaalndhu tholaingadaa engakita yendaa soldringa, naanga enna vachchukittaa vanjana pandrom engaluku sendhaapula naalu vaartha kooda englishla pesa varaadhu, phonela msg anupumbodhu kooda dictionary mode off pannitu english fontla tamila eludhiye thamila vaala vachchu kitu irukom.Sari ipdi asinga padrathuku edhaachu velaikudhaan polaamnaa nenachaa endha companiya paathaalum wanted b.e. Freshers skilled in java or .net nu eludhi iruku.Andha coursunga padikirathuku 35000 rubaa aagumaam. Aparam enna mayithukudaa b.e naalu varusham naanga paduchomnu solla maaten collegeku ponom.Maila open pannaa apply for this job nu dailiyum oru 10 mail varudhu, click pannaa 300rs katti online test attend pannunganu soldraanga.Test eludhi pass pandra levela irundhaa naa campuslaye pass aagirupene

Apa unaku enna elavudhaandaa theriyum,oru mayirum theriyaadhu aanaa velai kuduka maatikiraanganu company kaaranungala thittura,nallaa paduchchu place aanavangalayum thitturanu neenga ninaikalaam.Adhudhaanga enakum theriyala engineering paduchaa udane velai kidaikumnaanunga sarinu sendhu paduchen ippa innum velaiku pogalayaanu kaluvi kaluvi oothuraanga. Namma kooda schoola pakathulaye utkaandhu hotelku spelling theriyaama hotalnu eludhi teacher kitta thuppu vaangunavanlaam rendu companila place aagitu edhula poradhunu theriyala machi confusionaa iruku nee enna soldra machinu kekuraan.. Nalla vela anniku en kaila thuppaaki illa irundhirundhaa innerathuku naa pulal jailla suya saridhai eludhitu irundhirupen.. Avan appankitta kaasu irundhuchu 10latcham katti periya collegela sethu vittaaru.. Namma veetla padikira pulla enga paduchaalum nallaa padikumnu councellingla edho oru collegela seththu vittaaru.. Sari unnoda collegela irundhu mattum campusla place aagalayo nee olungaa padikaama eppa paathaalum padam paathukitu kadhai eludhitu irundhaa epdi kidaikumnu neenga ninaikalaam aanaa interviewla avaru kuduththa vadai saaptadhukellaam reject pannu vaanganu naa enna kanavaa kanden.. Kaalaila irundhu wait pandraan kadaisi aalaa interviewku vandhirukaane vadai saaptutu thembaa badhil sollatumnu paasamaa kuduthaarunu nenachu saapten.Aanaa onnu andha vadai kuduthavan tamil naatula endha moolaila irundhaalum sari avan saavu en kaila dhaandi en kailadhaan.Sari adhellaam vidunganga ippa naa ennadhan pandradhu tell me

Ippa eludhinadha kadhainu soldradhaa illa edho naayi velai kidaikaama polambikitu irukunu soldradhaa.. Enna venumnaalum nenachukangada aanaa naa enna eludhi amutchaalum padikiringa paarunga adhaandaa unga beauty, aanaa ungalukum innum velai kidaikalanu ninaikumbodhudhaan manasu apdiye lesaagi sandhoshathula vaanathula parakura madhiri iruku machi.. Neengalum enna madhiri vettiyaa utkaandhu tv paathu kitudhan irupingandra nambikailadhaanda dhinamun naa nimmadhiyaa 10 mani varaikum thoonga mudiyudhu.. Andha mariyaadhaya kaapaathikinga ambutudhaan solluven.. "Idhu kadhai alla oru engineerin pulambal"


-kishore kumar.


Monday 11 June 2012

பூக்கள் பூக்கும் தருணம்


"பூக்கள் பூக்கும் தருணம், ஆருயிரே........." ரிங் டோன் சத்தம் கேட்டதும் ஒரு வித சந்தோஷத்துடன் அட்டென்ட் செய்து ஹலோ என்றேன் மறுமுணயில் ஹலோ நா இன்னிக்கு office வரமாட்டேன், ஆபிஸ் பாய் கிட்ட என்னோட டேபிள்ல ஒரு புளு கலர் ஃபைல் இருக்கும் அத குடுதுட்றீங்களானு கேட்டா.. நா சரினு சொன்னேன்.. ஏன் வரலனு கேக்களானு மனசுக்குள்ள தோணுச்சு ஆனா கேட்க தெய்ரியம் இல்ல.. OK thanksnu சொல்லிட்டு அவ ஃபோன் கட் பண்ணிட்டா..

அவ office இன்னிக்கு வரமாட்டானு தெருஞ்சபுறம் எனக்கு ஆபீஸ் போறதுக்கான இண்டரெஸ்ட்டே போயிடுச்சு. இன்னிக்கு நாள் எனக்கு வாழ்க்கைல எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த போவதில்ல.. ஒவ்வொரு முறை அவ ஃபோன் பண்ணும்போதும் அவ என்ன love பன்றேனு சொல்லுவானு நினைப்பேன் ஆனா அவ ஒரு நாலு வார்த்தை office பத்தி பேசிட்டு கட் பண்ணிடுவா..

officela அவ எனக்கு பக்கத்து சீட்தான், தினமும் காலைல பார்த்த உடனே சிரித்தபடி good morningnu சொல்லுவா நானும் பதிளுக்கு சிரித்தபடி good morningnu சொல்லுவேன் அந்த சில நொடிகள் எனக்குள்ள வர சந்தோஷத வார்தைல சொல்ல முடியாது.

officela சேர்ந்த ஒரு வாரத்துலயே கல்யாணம் பண்ணா அவளத்தான் பண்ணணும்னு முடிவு பண்ணிட்டேன் .. நா அவள love பன்றேனு அவல தவிர officela இருக்க முக்கால்வாசி பேருக்கு தெரியும்.. எப்பாதான்டா அவ கிட்ட சொல்ல போரணு தினமும் என்னோட நண்பர்கள் கேட்டுகிட்டே இருப்பாங்க.. ஆனா அவ என்கிட்ட ஒரு ஃப்ரெண்ட் கிட்ட பேசுற அளவுக்கு கூட பேச மாட்டிக்கிறா , இதுல நா எங்க லவ் பன்றேனு சொல்றது.. நா லவ் பன்றேன் சொல்லி அவ கோவம் வந்து மேனேஜர் கிட்ட சொல்லி என்ன வேலைய விட்டு தூக்கிட்டானா அதுக்கப்புறம் நா பிச்சதான் எடுக்கணும் இந்த வேலை எப்படியோ லக்குல கிடசிருச்சு, நா படிச்ச படிப்புக்கு வேற வேலைலாம் கிடைக்கும்னு எனக்கு துளி கூட நம்பிக்கை இல்ல..

officeku போகி வழக்கம்போல வேலைய பாத்துட்டு இருந்தேன்.. அன்னக்கி office boya மேனேஜர் வேற வேலைக்காக வெளிய அனுப்பி இருந்தனால அந்த file அவன்கிட்ட குடுக்க முடியல .. மதியம் ஒரு ரெண்டு மணிக்கு அவ கிட்ட இருந்து எனக்கு போன் வந்துச்சு.. இந்த வாடியாசு அவ போன்ல லவ் பண்றேன்னு சொல்ல மாட்டாளான்னு எதிர்பார்புல அட்டென்ட் பண்ணேன் , எடுத்தவுடன் ஆபீஸ் பாய் இல்லாத விஷயத்த அவ கிட்ட சொன்னேன்.. அவ கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு OK byeநு சொல்லிட்டு கட் பண்ணிட்டா..

நா ஏமாற்றத்தோட மறுபடியும் என்னோட வேலைய பாத்துகிட்டு இருந்தேன்.. ஒரு மணி நேரம் கழித்து அவளிடமிருந்து மறுபடியும் போன் வந்தது.. அட்டென்ட் செய்து ஹலோ என்றேன் ,அவ உங்களுக்கு பிரச்சனை இல்லேனா கொஞ்சம் அம்பத்தூர் வரைக்கும் வந்து அந்த file குடுக்க முடியுமான்னு கேட்டா அடுத்த நொடியே நோ ப்ரோப்லேம் நிச்சயமா வரேன் எங்க வரணும்னு கேட்டேன்.. அம்பத்தூர் பஸ் ஸ்டோப்கு வந்துடுங்க நானும் வந்துடுறேன் என்றால்.. ஆபீஸ் முடிந்ததும் சந்தோஷமாக அந்த file எடுத்துகொண்டு கிளம்பினேன்..

ஆபீஸ் அருகில் இருந்த பஸ் ஸ்டோபிற்கு சென்ற உடன் அவளுக்கு போன் செய்து எந்த பஸ்ஸில் ஏறனும்னு கேட்டேன் அவ 47D நு சொன்னா , ஏற்கனவே அது எனக்கு தெரிந்த பதில்தான் இருந்தாலும் அவகிட்ட பேசுரத்துகாகவே போன் செய்து கேட்டேன். சரின்னு சொல்லிட்டு பஸ்ல ஏறி உட்காந்தேன்.. பஸ் புறப்பட்டது அவளை பார்க்க போகின்ற சந்தோஷத்தில் பல கனவுகள கண்டு கொண்டிருந்தேன்.

அவளை பார்த்தும் என்ன சொல்ல வேண்டும் என்றும் அவள் பதிலுக்கு என்ன சொல்ல வேண்டும் என்றெல்லாம் நினைத்து சந்தோஷப்பட்டு கொண்டிருந்தேன். அவளிடம் காதலை சொல்ல இதை விட நல்ல சந்தர்பம் கிடைக்காது எப்படியாச்சு சொல்லிடுடா என்று மன சாட்சி உள்ளே இருந்து சொல்லி கொண்டே இருந்தது.. அவளுக்கு போன் செய்து பஸ் ஏறிவிட்டேன் என்று சொன்னேன் , அவள் அம்பத்தூர் எஸ்டேட் வந்ததும் போன் பண்ண சொன்னால் நானும் சரி என்று சொல்லி விட்டு போனை வைத்தேன்.. மாலை நேரம் என்பதால் பஸ்ஸில் கூட்டம் அதிகமாகி கொண்டே போனது..

அடுத்து வந்த ஸ்டாப்பில் ஒரு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒரு கூடையை தூக்கி கொண்டு ஏறினாள்.. என் சீட்டில் அருகில் நின்றபடி அந்த கூடையில் இருந்த பூக்களை எடுத்து நூலில் கட்டி கொண்டே அவளுடன் ஏறிய இன்னொருவளுடன் பேசி கொண்டே இருந்தால்.. ரோட்டில் இருந்த மேடு பள்ளங்களை தாண்டி போகும்போதெல்லாம் அந்த கூடை என்னுடைய பந்தில் பட்டு கொண்டே இருந்தது, அந்த கூடையில் இருந்து என்னுடைய வெள்ளை நிற pantil கரை ஒட்டி கொண்டது.. அவர்கள் இருவரும் பேசி கண்டே பூ கட்டி கொண்டிருந்தனர்.

வண்டி ஆடி கொண்டே இருந்ததால் அந்த பெண்மணியால் பூ கட்ட முடியவில்லை , கூடையும் என் pantil பட்டு கொண்டே இருந்ததால் எழுந்துகொண்டே சீட்டில் அந்த பெண்மணியை உட்கார சொன்னேன்.. ரொம்ப நன்றி தம்பி என்று கூறிவிட்டு உட்காந்துகொண்டு கூடையை மடியில் எடுத்து வைத்து கொண்டு வேகமாக பூ கட்டினால்.. சிறிது நேரம் கழித்து அவளிடம் இருந்து மறுபடியும் போன் வந்தது .. எங்க வரிங்கன்னு கேட்டா ? நா வெளிய எதாச்சு கடைய பாத்து சொல்லலாம்னு பாத்தேன் ஆனா எந்த கடையும் இல்ல, நான் பார்பதை பார்த்து விட்டு அந்த பூ கட்டி கொண்டிருந்த பெண்மணி இது அண்ணா நகர் தம்பி என்றால்.. நானும் அண்ணா நகர்நு அவ கிட்ட சொன்னேன் . ok நு சொல்லிட்டு கட் பண்ணிட்டா .. நா அந்த பூ கட்டிகிட்டு இருந்தவங்கட thanksmaa என்றேன்.. அவங்க பதிலுக்கு சிரிச்சிட்டு என போகணும் தம்பின்னு கேட்டாங்க ,? அம்பதூர்னு சொன்னேன் .. இன்னும் அரை மணி நேராம் ஆகும்பா என்றார்.. கூட்டம் அதிகமாகி கொண்டே போனது .. அந்த பெண்மணி பேசிக்கொண்டே இரண்டு இரண்டு மல்லிகை பூவை எடுத்து நூலில் வைத்து கட்டிக்கொண்டு இருந்தார்..

நான் அவர்கள் கட்டுவதையே பார்த்து கொண்டு வந்தேன்.. அவர்கள் வேகமாக அத்தனை பூக்களை கட்டுவதை பார்க்கும்போது வியப்பாக இருந்தது , இன்னிக்கு கூட்டம் ஓவரா இருக்கு , நல்ல வேளைப்பா நீ மட்டும் இன்னிக்கு இடம் குடுகலேனா நா பூகட்டிருக்கவே முடியாது என்றால் , நான் எதுவும் சொல்லாமல் சிரித்தேன் .. அவளிடமிருந்து மறுபடியும் போன் வந்தது , எங்க இருகிங்கனு கேட்டா ? நா பூ கட்டிட்டு இருந்தவங்ககிட்ட எங்க இருக்கோம்னு கேட்டேன் , அம்பத்தூர் எஸ்டேட் வர போகுது தம்பி என்றார்.. நானும் அதையே அவளிடம் சொன்னேன். சரி நா அம்பத்தூர் O.T. பஸ் ஸ்டாப்ல நிக்கிறேன் வாங்கனு சொன்னா , ம்ம்ம் ok நு சொல்லிட்டு வச்சுட்டேன்..

அம்பத்தூர் O.T பஸ் ஸ்டாப் வந்தா சொல்லுங்கமா என்று பூ கட்டி கொண்டிருந்தவரிடம் சொன்னேன் .. சரி தம்பி.. கூடையில் இருந்த எல்லா பூக்களையும் கட்டி முடித்து விட்டார் .. பூவில் ஒரு முளத்தை கட் செய்து ஒரு பேப்பரில் சுற்றி என்னிடம் குடுத்தார்.. இல்ல வேணாம்மா என்றேன், பரவா இல்ல வாங்கிக்கப்பா நீ சீட்டு குடுகலேனா எனக்கு நஷ்டமாகி இருக்கும் வாங்கிக்கப்பா ஒரு முழம் freeyaa குடுத்தா எனக்கு பெருசா நஷ்டமாகிடாது என்றார்.. இல்லமா எனக்கு இன்னும் கல்யாணமாகல , இங்க தனியா ரூம்ல இருக்கேன் அதனால தேவை படாதுமா என்றேன்.. பரவா இல்ல பைக்குகாவது போடுப்பா என்கிட்டே பூ வாங்குனா சீக்கிரமே உனக்கு கல்யாணம் ஆகிடும் பாரு என்றால்..

நான் சிரித்து கொண்டே வாங்கி கொண்டேன்.. அடுத்த ஸ்டாப் அம்பத்தூர் O .T என்றார்.. நான் இறங்குவதற்கு வசதியாக கதவினருகில் சென்று நின்றேன்.. பஸ் ஸ்டாப்பில் இறங்கி அவளுக்கு போன் செய்தேன் .. அவள் போனை எடுத்த உடன் வந்துட்டேன் leftla திரும்பி பாருங்க நா உங்கள பாத்துட்டேன்னு சொன்னா.

அவ தூரத்துல மஞ்ச கலர் சுடிதார்ல என்ன பாத்து சிருச்சுகிட்டே ஸ்கூட்டர்ல வந்தா , நானும் அவள பாத்து சிருச்சேன் எப்பவும் பாக்குறத விட இன்னிக்கு அவ ரொம்ப அழகா இருந்தா.. திடீர்னு என் மனசுக்குள்ள ஒரு தெய்ரியம் இவள வாழ்க்கைல எதுக்காகவும் மிஸ் பண்ண கூடாதுன்னு மனசுக்குள்ள தோனுச்சு.. இன்னிக்கு நிச்சயம் அவ கிட்ட லவ் சொல்லிடணும்னு தோனுச்சு ..அவ கிட்ட வந்தா.. சிரித்தபடி ரொம்ப thanks , இந்த file ல சில modifications பண்ணி நாளைக்கு மேனேஜர் கிட்ட குடுக்கணும் அதனாலதான் உங்களுக்கு கஷ்டம் குடுத்துட்டேன் என்றால்..

அதலாம் ஒன்னும் பிரச்சனை இல்ல என்றேன்.. ஏன் officeku வரலேன்னு கேட்கலாம்னு தோனுச்சு ஆனா இருந்தாலும் மனசுல ஏதோ தயகத்துல கேட்கல , வாங்க கூல் ட்ரிங்க்ஸ் குடுச்சிட்டு போலாம்னு சொல்லிவிட்டு முன்னே நடந்து சென்றால் .. நானும் அவள் பின்னாலே சென்றேன்,, ஒரு கடைக்குள் சென்று உட்கார்ந்தோம்.. அவளோட இந்த மாதிரி தனியா ஹோடேல்கு போனும்னு எவ்ளோவோ நாட்கள் கனவு கண்டிருக்கேன் , எல்லாமே இன்னிக்குதான் நடக்கணும்னு எழுதி இருக்கு போல, உங்களுக்கு என்ன ஜூஸ் வேணும்னு கேட்டா , ஆரஞ்சு ஜூஸ்நு சொன்னேன் , அவ ரெண்டு ஆரஞ்சு ஜூஸ் நு ஆர்டர் பண்ணா , எனக்கும் ஆரஞ்சு தான் பிடிக்கும்னு சொன்னா , அவளுக்கும் ஆரஞ்சு ஜூஸ்தான் பிடிக்கும்னு தெரிஞ்சதும் எனக்கு இன்னும் சந்தோஷாகிடுச்சு ..

இப்ப கொஞ்சம் தெய்ரியம் வந்து ஏன் officeku வரலேன்னு கேட்டேன் .. வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்திருந்தாங்க அதான் வர முடியலன்னு சொன்னா சிறிய வெட்கத்துடன் சொன்னா .. இது வரைக்கும் என்னோட மனசுக்குள்ளா இருந்த சந்தோஷம் எல்லாம் ஒரு செகண்ட்ல காணாபோகிடுச்சு.. நா அதுக்கப்புறம் அவக்கிட்ட எதுவும் பேசாம ஆரஞ்சு ஜூஸ் குடுச்சிட்டு கிளம்புறேன்னு சொன்னேன்.. அவ எதிர்பக்கம் இருக்க பஸ் ஸ்டாப்ல 47D போகணும்னு சொன்னா, ம்ம் சரின்னு சொல்லிட்டு கிளம்புனேன் .. file குடுக்கவே இல்லையேன்னு கேட்டா, சாரி மறந்துட்டேனு சொல்லிட்டு bagla இருந்து file எடுத்து குடுத்தேன் .

அவ ஸ்கூட்டில அந்த file எங்க வைக்கிறதுனு பாத்தா , கவர் எடுத்துட்டு வர மறந்துட்டேனு சொன்னா , உங்ககிட்ட எதாச்சு கவர் இருக்கானு கேட்டா , எனக்கு எப்ப இந்த இடத்தைவிட்டு போவோம்னு இருந்துச்சு , இவ்ளோவ்னால் பைதியகாரதனமா அவளும் என்ன லவ் பண்ணுவான்னு நெனச்சிட்டு இருந்தோமேன்னு வெறுப்பா இருந்துச்சு, என்னோட bagல இருந்த கவரை எடுத்து குடுத்தேன்.. வாங்கி கொண்டு OK bye and thank you nu சிருச்சுகிடே சொன்னா எப்பவும் அவ அப்படி சிரிக்கும்போது எனக்கு வாழ்க்கை முழுசா இப்படியே இருந்தடலாம்னு இருக்கும் ஆனா இன்னிக்கு அந்த ஒவ்வொரு நொடியும் நரகமாதிரி இருக்கு, ஸ்கூட்டர்லே ஏறி போய்ட்டா.....

நா பஸ் ஏறி என்னோட ரூம்க்கு வந்தேன் , மனசு வலிகிறத அன்னிக்குதான் உணர்ந்தேன் .. படத்துல இந்த மாதிரி சீன் வந்த இவ இல்லனா இன்னொருதினு தோணும் ஆனா உண்மையா ஒருத்திய நமக்கு நெனச்சது இப்ப வேற ஒருதனுகுனு நினைக்கும்போது பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருந்துச்சு , இவ்ளோவ் நாள் லூசு மாதிரி இருந்திருகொமேனு நெனச்சேன்.. நா அவல லவ் பண்றேன்னு office
முக்கால்வாசி பேருக்கு புருஞ்சிரிச்சு ஆனா இவளுக்கு மட்டும் எப்படி புரியாம போச்சு.. என்ன செய்வது என்று புரியாமல் ரூமில் உட்காந்திருந்தேன்.. பூக்கள் பூக்கும் தருணம் என்று ring tone கேட்டது , அவ தான் போன் செய்திருந்தா .. எப்பவும் அவ போன் பண்ணா சந்தோஷமா இருக்கும் ஆனா இன்னிக்கு அவ எதுக்கு போன் பண்ணான்னு தோனுச்சு.. எடுத்த உடன் ஹலோ என்றேன்..

உங்களுக்கு இத சொல்றதுக்கு இவ்ளோவ் நாள் ஆச்சா , ஆனா பரவா இல்லை நீங்க கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டிங்கனு நெனச்சேன் என்றால்.. எனக்கு எதுவும் புரியவில்லை ,புரியலங்க என்னதுநு கேட்டேன்.. நீங்க என்ன நிஜமாவே லவ் பன்றின்களா இல்லையான்னு கேட்டா , எனக்கு அதிர்ச்சியாக இருந்துச்சு ஆமான்னு மெல்லமா சொன்னேன் .. நானும் உங்கள லவ் பண்றேன்னு சொன்னா.. என்னால கொஞ்சம்கூட நம்ப முடியல.. வேற யாராச்சு கலைகராங்கலோனு கூட தோனுச்சு ஆனா அது அவ குரல்தான்நு என்னோட உள் மனசு சொல்லுச்சு.. உனக்கு எப்படி தெருஞ்சுச்சுனு கேட்டேன்.. அதான் தெளிவா எழுதி இருந்துச்சே.. இருந்தாலும் பூ சுத்தி இருந்த கவர்ல i love u நு எழுதி இருக்கறத நா பாக்காம விட்டிருந்தா என்ன பன்னிருப்பனு கேட்டா .. எனக்கு அப்பதான் அந்த பெண்மணி பேப்பரில் சுற்றி குடுத்த பூ ஞாபகத்துக்கு வந்தது அதை அந்த கவர்ல இருந்து எடுக்காம file நா அதுல வச்சு குடுத்ததும் அப்பதான் புரிந்தது .. என்னதான் பூ குடுத்து லவ் சொல்றது பழைய காலத்து ஸ்டைலாக இருந்தாலும் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சுன்னு சொன்னா.. நானும் நான் வேணுமென்று செய்ததுபோல் உனக்கு பிடிக்கும்னு தெரியும் அதான் அப்படி குடுத்தேன் என்று சொல்லி சமாளித்தேன்..

உன்ன இன்னிக்கு பொண்ணு பாக்க வந்தாங்கனு சொன்னயேநு கேட்டேன் .. அப்படி சொன்னாவாச்சு நீ லவ் பண்றேன்னு சொல்லுவியானுதான் அப்படி சொன்னேன் என்றால், ஆனா நீ அப்பவும் எதுவும் சொல்லல, லவ் பண்றத சொல்றதுக்கே தெய்ரியம் இல்லாதவனா போய் எப்படி கல்யாணம் பண்ணிகிறது பேசாம வேற யாராச்சையும் கல்யாணம் பண்ணிகலாம்னுதான் இருந்தேன் வீட்டுக்கு வந்தப்புறம்தான் அந்த பூவ பாத்தேன்னு சொன்னா, நீ என்ன லவ் பண்றேன்னு நீ வேலைக்கு சேர்ந்த முதல் மாசமே எனக்கு தெரியும் நீ எப்ப சொல்லுவேனுதான் வெயிட் பண்ணேன் என்றால் . எனக்கு சந்தோஷத்தில் என்ன பேசுவதென்றே தோணவில்லை.. சரி என்னோட அப்பா வந்துட்டாரு நாளைக்கு officeல பாக்கலாம்னு சொல்லிட்டு போன் வச்சுட்டா........

அவள் போனை வைத்த பிறகுதான் அவளிடம் இன்னும் நிறைய பேச வேண்டும் என்று தோன்றியது .. ஒரு வருஷத்த வேஸ்ட் பண்ணிட்டமேனு தோனுச்சு .. மறுபடியும் அவளுக்கு போன் செய்தேன் , ஆனால் அவள் எடுக்கவில்லை .. இத்தன மாசம் காத்துகிட்டு இருந்த நாளைக்கு காலைல வரைக்கும் வெயிட் பண்ண முடியாதான்னு மெசேஜ் அமுட்சா , நான் பதிலுக்கு ஏற்கனவே பல மாசம் வேஸ்ட் பண்ணிட்டேன் இனிமே ஒரு நிமிஷம் கூட வேஸ்ட் பண்ண மாட்டேனு மெசேஜ் செய்தேன் . அப்படியே நைட் முழுவதும் மெசேஜ் அமுச்சிகிட்டே இருந்தோம் ....

வாழ்கை எவ்ளோவ் சுவாரசியமா இருக்குனு தோனுச்சு .. அன்னிக்கு அந்த பூ விற்கும் பெண்மணி மட்டும் எனக்கு அந்த ஒரு முழம் மல்லிகை பூவை குடுக்காமல் இருந்திருந்தால் , அவள் சுற்றி குடுத்த அந்த பேப்பரில் ஏதோ ஒரு காதலன் யாருக்கோ எழுதிய அந்த i love u என்று எழுதி இருந்த பேப்பரை எனக்கு சுற்றி குடுக்காமல் இருந்திருந்தால், அந்த பூவை நா மறக்காமல் என்னுடனே எடுத்து வந்திருந்தால் என்னோட வாழ்க்கை இவ்ளோவ் சந்தோஷமா மாறி இருக்குமான்னு எனக்கு தெரியல ... என்னோட வாழ்க்கைல அந்த ஒரு முழம் மல்லிக பூவ மட்டும் என்னால மறக்கவே முடியாது ...

-கிஷோர் குமார்.

Wednesday 2 May 2012

இது ஒரு பொன்மாலை பொழுது .....................


அன்று மாலை பூந்தமல்லி பஸ் ஸ்டாபில் 65B பஸ் வந்து நின்றது .. நாலாபுரதிலிருந்தும் மக்கள் சீட்டை பிடிபதுற்கு ஓடி வந்து கொண்டிருந்தனர் .. பஸ்ஸில் இருந்தவர்களை இறங்க விடாமல் அவசரம் அவசரமாக மக்கள் எறி சீட்டை பிடித்து கொண்டிருந்தனர் .. சிலர் பைகலயும் கர்சீபுகலயும் ஜன்னல் வழியாக போட்டு சீட்டை பிடிதுகொண்டிருந்தனர் .. இதை பக்கத்து பஸில் ஜன்னல் சீட்டில் உட்காந்து பார்த்து கொண்டிருந்த எனக்கு என் அம்மாவிடமிருந்து ஃபோன் வந்தது எடுதவுடன் என்ன ஆச்சு நு கேட்டாங்க ? ஆப்டிடியூட் டெஸ்ட் பாஸ் பண்ணிட்டேன் நாளைக்கு காலைலதான் HR இன்டர்வியூ நு சொன்னேன் .. சரி இப்ப எங்க இருகனு கேட்டாங்க .? . இப்பதான் பூந்தமல்லிக்கே வந்தேன் இன்னும் ஒரு மணி நேரம் ஆகும்னு சொன்னேன் . சரி வா நு சொல்லிட்டு போன வச்சாங்க.... ஒரு வயதானவர் கை கால்கள் நடுங்க பஸ்ஸில் ஏறி அனைவரிடமும் பிச்சை கேட்டு கொண்டிருந்தார் .. சிலர் ஒரு ரூபாய்யோ ரெண்டு ரூபாய்யோ சில்லரயா தந்தனர் ,சிலர் இல்லை என்று தலை ஆடினார் , சிலர் ஜன்னல் வழியாக வெளியே பார்த்து கொண்டே இவரை பார்க்காததுபோல் நடிதனர் .. என்னிடம் வந்து கேட்டார் இல்லை என்று தலை ஆடினேன் .. எனக்கு பின்னாடி சீட்ல இருந்த இருவரிடம் போயி கேட்டார் ஒருவர் 2 ரூபாய் தந்தார் .,ஜன்னல் பக்கத்தில் உட்காந்திருந்தவர் 20ரூபாய் எடுத்து குடுத்தார் .. அதை வாங்கிய அந்த வயதானவர் தன்னுடய இரு கைகளாலும் கடவுளை பார்த்து கும்பிடுபவற்போல் அவரை நடுங்கிய கைகளுடன் வணங்கிவிட்டு பஸ்ஸில் இருந்து இறங்கி கீழே கொஞ்ச நேரம் உட்காந்து இருந்து விட்டு அடுத்த பஸ்ஸில் ஏறினார் ...

பின் சீட்டில் இருந்தவர் ஜன்னல் சீட்டில் உட்கார்ந்து இருந்தவரிடம் என்ன ஸார் 20 ரூபாய் குடுத்துடிங்க ? பூந்தமல்லிள இருக்க எல்லா பிச்ச காரங்களுக்கு இப்படி பாவ பட்டு 20 ரூபாய் குடுத்தா அப்பறம் பஸ்கு டிக்கெட் எடுக்க காசு இல்லாம நாமளும் அவங்க கூட சேர்ந்து பிச்சத்தான் எடுக்கணும் என்றார் .. அதற்கு அந்த ஜன்னல் சீட்டில் உட்கார்ந்திருந்தவர் அப்படி இல்ல ஸார் நா எல்லாருக்கும் 20ரூபாய்ய எடுத்து குடுக்க மாட்டேன் .. அந்த வயசானவர் குடும்பத்தோட என்னோட நண்பர் வீட்லத்தான் வாடகைக்கு இருந்தார் அவரோட பையன் ஒரு கம்பெனில வேல செஞ்சுட்டு இருந்தான் இவர் ரிடயர் ஆகி வீட்ல இருந்தார் .. ரெண்டு வருஷதுக்கு முன்னாடி நடந்த ரயில் குண்டு வெடிப்புல அவரோட மனைவி ஒரே பையன் ரெண்டு பேருமே இறந்துடாங்க .. அதுக்கபுரம் அவர் பைத்யமாய்ட்டாருனு எல்லாரும் சொன்னாங்க .. பாவம் கடைசில இப்ப பிச்ச எடுத்துட்டு இருக்காரு .. அவருக்கும் என்னோட அப்பா வயசுதான் இருக்கும் .. Naalaiku இதே நிலமை என்னோட அப்பாவுக்கும் வரலாம் ஆப என்ன மாதிரி யாராவது ஒருத்தர் அட்லீஸ்ட் அவருக்கு டீ குடிக்கவாச்சு காசு குடுபாங்கள அதான் .. எல்லாம் ஒரு சின்ன சுயநலம்தான் ஸார் endraar .... Oh அப்படியா சார் என்று பக்கத்தில் இருந்தவர் அந்த வயதானவரை ஒரு முறை பரிதாபமாக எட்டி பார்த்தார் ... நானும் அந்த வயதானவரை ஒரு முறை திரும்பி பார்த்தேன் , ச்ச நாம கூட ஒரு 10ரூபாய் குடுதிருக்கலாம்னு நெனச்சேன் .............. ஹெட் செட்ட மாட்டி பாட்டு கேட்க ஆரம்பிச்சேன் .. வீட்டுக்கு போனதிலிறிந்து எல்லாரும் நாளைக்கு HR இண்டெர்வீவ்லா எண்ணலாம் question கேட்பாங்க அதுக்கு எப்படிலாம் பதில் சொல்லணும்னு ஆளுக்கு ஒரு advice சொன்னாங்க ,எல்லார்க்கும் மனசுக்குள்ள பெரிய சந்தோஷம் ,சொந்தக்காரங்க எல்லாருக்கும் ஃபோன் செய்து வேலை கிடைச்சிடுசுனே சொல்லிட்டாங்க .

அந்த வேலை கெடச்சா மாசம் 20000 ரூபாய் சம்பளம் என் life மட்டும் இல்ல என்னோட குடும்பத்தோட life செட்டில் ஆகிடும் கடன் எல்லாத்தையும் ஒரு 4 வருஷத்துல அடச்சிடலாம்னு எங்க அப்பாவும் அம்மாவும் கணக்கு போட்டுகிட்டு இருந்தாங்க .. எங்க அப்பா 20000 ரூபாய் சம்பளம் வாங்க 20 வருடமாச்சு உலகம் எவ்ளோவ் மாறிபோச்சு பாருன்னு ஆச்சர்யபட்டு பொலம்பிக்கிட்டு இருந்தாரு .. அந்த வேலைய பத்தியே எல்லாரும் பேசிக்கிட்டு இருந்தாங்க .. ஒரு வழியா நாளைக்கு சீக்கிரம் எழுந்திருகனும்னு கஷ்டப்பட்டு கண்ணா மூடி தூங்குனேன் .. காலைல என்னோட அம்மா என்ன எழுப்பி விட்டாங்க .. "இது ஒரு பொன்மாலை பொழுது " பாட்டு சன் Tv la ஓடிக்கிட்டு இருந்துச்சு .. இன்னிக்கு evening எனக்கு நிஜமாவே பொன் மாலை பொழுதாதான் இருக்கும்னு மனசுக்குள்ள சிரித்தபடியே அவசரம் அவசரமா கிளம்புனேன் .. Interview காலைல 8 மணிக்குதான் ஆரம்பிக்கும் அதுவும் ஸ்ரீ பெரம்பதூர் தாண்டி இருக்கு அதனால என்னோட அண்ணனோட பைக் எடுத்துகிட்டு வீட்ல இருந்து கிளம்புனேன் .. காலைல 6 மணிநால ரோடு வெறுச்சோடி இருந்துச்சு .. பைக்ல இப்படி வேகமா போகணும்னு எனக்கு ரொம்ப நாள் ஆசை எல்லாமே இன்னகிதான் நடக்கணும்னு எழுதி இருக்கு போலன்னு தோனுச்சு .. என்னோட வாழ்கைலையே ரொம்ப சந்தோஷமான நாள் மாதிரி மனசுக்குள்ள தோனுச்சு .. கோவர்தணகிரி தாண்டி வந்துகிட்டு இருக்கும்போது .. எனக்கு முன்னாடி போன லாரில இருந்து ஏதோ சத்தம் கேட்டுச்சு . லாரிய slow பண்ணுனான் .. அப்பறம் சைடு வாங்கி வேகமா போய்டான்.. ஏதோ வண்டி கீழ விழுந்து கடக்கர மாதிரி தெரிஞ்சிச்சு .. கிட்ட போன பிறகுதான் தெரிஞ்சுச்சு முன்னாடி போயிடு இருந்த tvs 50ya லாரிகாரன் இடுச்சிட்டு நிக்காம போயடானு .. 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் கீழே விழுந்து கிடந்தார் . ..

வண்டிய நிறுத்தி கீழ இறங்காம வண்டில உக்காந்தே பாத்தேன் .. அவருடைய தலையிலிருந்து ரத்தம் வெளியே வந்து கொண்டிருந்தது . அவருடைய வெள்ளை சட்டை முழுவதும் ரத்தம் தெரிதிருன்தது .. என்னுடைய இதய துடிப்பு அதிகமாச்சு .. இதுக்கு முன்னாடி என் வாழ்க்கைல நா இந்த மாதிரி கொடூரமான ரோடு accidentலாம் நேர்ல பாத்ததில்ல .. படத்துல பாக்குற accident மாதிரி இல்ல உண்மையான accidenta பாக்கும்போது நமக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துரும் .. அவர் உடம்பில் எந்த அசைவும் இல்லை . ஒரு வேல செத்து போயடாரோனு தோனுச்சு .. சுற்றி எல்லா பக்கமும் பார்த்தேன் கண்ணுகெட்டியவரை யாரையும் காணவில்லை .. தூரத்தில் ஒருவர் cyclela வந்து கொண்டிருந்தார் .. நமக்கு எதுக்கு வம்பு ,யாரும் பாக்குறதுக்கு முன்னாடி இந்த இடத்த விட்டு கேளம்பிடுவோம்னு நெனச்சு வண்டிய ஸ்டார்ட் பண்ணி அங்க இருந்து திரும்பி பாக்காம போனேன் .. வண்டியோட side mirror la பாக்கும்போது அவரோட கால் அசைர மாதிரி தெருஞ்சுசு .. சைடு mirrorla பாத்துகிட்டே போனேன் .. என்னோட மனசுல நேத்து என் பின்னாடி உட்காந்து இருந்தவர் சொன்னதுதான் உருத்திகிடே இருந்துச்சு .. நாம இன்னிக்கு அவருக்கு ஹெல்ப் பண்ணா நாளைக்கு இதே நிலைமை எனக்கோ என்னோட அப்பாவுக்கோ வந்தா வேற யாராவது ஹெல்ப் பண்ணு வாங்கனு தோனுச்சு .. மணி 6.30 தான் ஆனது அவர ஹோச்பிடெல்லா செத்துட்டு கூட interview போய்டலாம்னு முடிவு பண்ணி வண்டிய திருப்பி அந்த இடத்துக்கு போனேன்.. அவர் ஏதோ அனத்துவது தெளிவாக கேட்டது .. நல்லவேளை உயிர் இருக்கு என்று நினைத்தேன் அனால் அவரை hospiteluku எப்படி தூக்கி கொண்டு போவது என்று புரியவில்லை .. Cycleil வந்தவர் கிட்ட வந்தார் .. எப்டி சார் ஆச்சுனு கேட்டார் .. லாரி காரன் இடுசிடான் , பக்கதுல எதாச்சு hospitel இருக்கானு கேட்டேன் ..

பக்கதுல ஆவடி மார்க்கெட்ல s.k. hospitel இருக்குபா .. நரையா ரத்தம் போய்டே இருக்கு ஆம்புலன்ஸ் வரதுக்குள்ள நாம hospitalke போகிடலாம் தூக்குப்பா என்றார் .. அவர் தன்னுடைய சைக்கிளை ஓரமாக நிறுத்தினார் . அடிப்படவரின் பாக்கெட்டில் இருந்து சின்ன டைரி கீழே விழுந்து கிடந்தது அதை எடுத்து என்னிடம் குடுத்தார் .. அவரை நாங்கள் இருவரும் சேர்ந்து தூக்கி என் பைக்கில் ஏற்றி கொண்டு சென்றோம் .. அவருடைய தலை என் தோள்மேல் பட்டு கொண்டு இருந்தது .. அவர் தலையிலிருந்து என் தோளிலும் முதுகிலும் ரத்தம் ஒட்டிகொள்ளுமே என்று நினைத்தேன் .. அடுத்த சில நிமிடங்களில் hospitelai அடைந்தோம் .. என் பின்னால் உட்காந்திருன்தவர் stretcher எடுத்துட்டு வாங்க என்று கத்திகொண்டே இருந்தார் .. வண்டியை நிறுத்தி சில நொடிகளில் அங்கிருந்த சிலர் ஓடி வந்து அவரை இறக்குவதற்கு உதவினர் .. Strecheril வைத்து உள்ளே எடுத்து சென்றோம் .. டாக்டர் உடனே அவருக்கு சிகிச்சை அளிக்க ஆரம்பித்தார் .. எப்படியாச்சு? என்று சுற்றி நின்றவர்கள் கேட்டு கொண்டே இருந்தனர் .. அவர்களிடமும் நடந்ததை கூறி முடிக்கும் முன்பே , டாக்டர் வெளியே வந்து accident caseலப்பா, நா treatement பண்றேன் நீங்க போய் policeku inform பண்ணிட்டு வந்துருங்க என்றார் .. அவர் சொன்னதை கேட்டவுடன் என் தலையே சுத்துவதுபோல் இருந்தது எனக்கு போலீஸ் ஸ்டேஷன்கெல்லாம் போகணுமென்று தெரியாது தெரிஞ்சிருந்தா வந்திருக்கவே மாட்டேன் .. போலீஸ் ஸ்டேஷன் போகணும் என்று நினைத்த உடனே என் மனதில் பயம் தொற்றி கொண்டது .. என் கூட வந்தவர் என்னபா முழிக்கிற இந்த ரோடு கடைசிலதான் போலீஸ் ஸ்டேஷன் போய் complaint பண்ணிட்டு வாப்பா என்றார் .. சார் எனக்கு அதெல்லாம் தெரியாது சார் என்று கூறிவிட்டு அமைதியாக நின்றேன் .. நான் பயப்படுகுறேன் என்று அவருக்கு புரிந்தது ..

இதுகெல்லாம் ஏன்பா பயபடுற சரி நீ இங்க இருந்து அவர பாத்துக்கோ நா போய் complaint பண்ணிட்டுவரேன் என்று சொல்லி விட்டு கிளம்பினார் .. கொஞ்ச நேரம் ICU முன்னாடியே நின்னுகிட்டு இருந்தேன் .. மணி 7.30 ஆனது .. ச்ச போனவர் வந்தா அவர்ட சொல்லிடு interviewku எப்படியாச்சு போய்டலாம் ஆனா அவரை இன்னும் காணமே என்று பார்த்து கொண்டே இருந்தேன் .. அப்பொழுதுதான் கவனித்தேன் என் சட்டை முழுவதும் ரத்தகரை இருந்ததை .. Bathroomku ஓடினேன் அங்கு தண்ணீரை தெளித்து துடைத்து பார்த்தேன் ஆனால் ரத்த கரை போகவே இல்லை .. சரி friend சட்டைய வாங்கி போட்டு கிட்டு interview attend பண்ணிக்கலாம் என்று மனதை தேற்றிக்கொண்டேன் ..என் நண்பனிடம் இருந்து போன் வந்தது .. எடுத்த உடன் எங்கடா இருக்க என்றான் .. வரதுக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல இருக்கு மச்சி . கொஞ்சம் லேட் ஆனா பரவைல்லைல ? என்றேன் .. 12 மணிக்கு interview முடியறதுக்கு முன்னாடி எப்படியாச்சு வந்துருடா என்றான் .. ம்ம் சரிடா என்று கட் செய்தேன் அவன் சொன்னதை கேட்ட உடன்தான் எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது .. போனை பாக்கெட்டில் வைக்கும்போதுதான் அந்த அடிபடவரின் டைரியை கவனித்தேன் .. டைரியில் முதல் பக்கத்தில் வீட்டு நம்பர் எழுதி இருந்தது .. அந்த போன் no.ku போன் பண்ணி விஷயத்தை சொல்லிவிட்டு interviewku கிளம்பலாம் என்று நினைத்து .. அந்த no.ruku போன் செய்தேன் .. ரிங் போனது உடனே கட் செய்துவிட்டேன் , இந்த விஷயத்தை எப்படி சொல்வது?, சொன்ன உடன் கேட்பவருக்கு ஏதாவது ஆகி விட்டால் என்ன செய்வது அதோடு இந்த மாதிரி விஷயதெல்லாம் நாசூகாதான் சொல்லனும் .. அங்கு நின்று கொண்டிருந்த ward boyai கூப்பிட்டு விஷயத்தை சொல்ல சொன்னேன் .. ரிங் போனதும் ward boyidam குடுத்து விட்டு .. நகர்ந்து நின்றேன் ..

அந்த wardboy விஷயத்தை சொல்லி விட்டு போனை என்னிடம் குடுத்தான் .. அவங்க பாண்டிச்சேரில இருப்பாங்க போல சார் வரதுக்கு எப்படியும் 4 மணி நேரமாச்சு ஆகும் என்றான் .. டாக்டர் வெளியே வந்து ஆபரேஷன் பன்னனும்பா போலீஸ்க்கு inform பண்ணியாச்சா என்றார் . Inform பண்ண போகி இருக்கார் சார் அவர் எப்படி சார் இருக்கார் என்று கேட்டேன் . Crictical situationdhaampa போலீஸ் வந்தப்புறம் எனக்கு inform பண்ணுங்க என்றார் .. மணி 9 ஆனது போலீஸ் constable உடன் அவரும் வந்தார் .. இவர்தான் சார் முதல பாத்தார் என்று என்னை காட்டினார் . போலீசை பார்த்த உடன் மறுபடியும் எனக்குள் பயம் பற்றி கொண்டது .. நடந்ததை முதலிலிருந்து அவரிடம் மறுபடியும் சொன்னேன் .. lorry, Tvs 50yoda நம்பர நோட் பண்ணிங்களா என்று கேட்டார் ? இல்ல சார் TVS 50 இன்னும் அங்கேதான் சார் இருக்கு என்று பக்கத்தில் இருந்தவர் சொன்னார் .. சரி நா spotku போய் பாத்துட்டு வரேன் நீங்க இங்கயே இருங்க என்றார் .. சரி சார் என்று தலையாட்டினேன் .. என்னோட சைக்கிள் அங்கதான் சார் இருக்கு நானும் வரேன் சார் என்று பக்கத்தில் இருந்தவரும் அவருடன் சென்றுவிட்டார் .. அங்கிருந்த chairil உட்காந்து கொண்டு வாட்சையே பார்த்து கொண்டிருந்தேன் .. நேரம் ஆகா ஆகா interview attend பண்ண முடியாதோ என்று பயம் வந்தது .. என்னுடைய போனில் இருந்து அவருடைய குடும்பத்துக்கு போன் செய்ததால் ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் அந்த குடும்பம் போன் செய்து அவர் எப்படி இருக்கிறார் என்று கேட்டு கொண்டே இருந்தனர் , பாவம் அவர்கள் வேதனை அவர்களுக்கு .. 10 மணி அளவில் அந்த போலீஸ் மட்டும் வந்தார் வந்து என்னுடன் ஒரு பேப்பரில் sign வாங்கிகொண்டு , என்னுடைய போன் நம்பரை எழுதி கொண்டு என்னை அனுப்பினார் .. இன்னும் இரண்டு மணி நேரம்தான் இருக்கு அதனால் வண்டியில் வேகமாக போய் கொண்டே இருந்தேன் ...
பூந்தமல்லி தாண்டி சென்று கொண்டிருந்தபோது போன் ஒலித்தது . என்னோட frienduதான் போன் பண்ணி இருந்தான் .. மச்சி எங்கடா இருக்க என்று கேட்டான் ? இன்னும் 45 minutesla வந்துருவேன் மச்சி .. Ok சீக்கிரம் வாடா HR interviewla வெறும் tell about urself மட்டும்தான் கேக்குறாங்க .. Aptitude பாஸ் பண்ண எல்லாரையுமே செலக்ட் பண்ணிடுவாங்கன்னு பேசிகிறாங்க மச்சி . சீக்கிரம் வா என்றான் . Ok da என்று போனை கட் செய்து விட்டு வண்டியை சந்தோஷத்துடன் வேகமாக ஓட்டினேன் .. மறுபடியும் போன் வந்தது வண்டிய நிறுத்தாம அப்படியே attend பண்ணுனேன் .. நா ஆவடி போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து பேசுறேன்னு சொன்னாங்க .. வண்டிய ஓரமாய் நிறுத்தி விட்டு சொல்லுங்க சார்னு சொன்னேன் .. அவரோட டைரி உங்ககிட்ட இருக்கறதா சொல்லி இருந்திங்கள, இப்ப எங்களுக்கு அது தேவபடுதுப்பா அத hand over பண்ணாமையே போயடின்களே என்றார் .. ஆமா சார் என்கிட்டதான் இருக்கு என்றேன் .. சீக்கிரம் hospiteluku வந்துருங்க நா அங்கதான் இருக்கேன் என்றார் .. நான் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.. உடனே வாப்பா நா இத முடுசிட்டு courtuku வேற போகணும் சீக்கிரம் கிளம்பி வாப்பா என்றார் .. எனக்கு தலை சுற்ற ஆரம்பித்து விட்டது .. போலீஸ் கூப்பிடும் போது எனக்கு முக்கியமான வேலை இருக்கு இப்ப வர முடியாதுனு சொல்ற அளவுக்கு எனக்கு தெய்ரியம் இல்லை .. சரி யோசிச்சு டைம் வேஸ்ட் பண்றதுக்கு சீக்கிரம் போய் குடுத்துட்டு வந்துடலாம்னு முடிவு பண்ணி வேகமா hospitalku போனேன் .. கரயாஞ்சாவடில ஏதோ tanker lorry ரிப்பேர் ஆகி நிக்கிதாம் அதனாலே சுதிக்கிட்டுதான் போகணும்நு சொன்னாங்க .. வாட்சை பார்க்காமல் வேகமாக சென்றேன் .. Hospitalai அடைந்தபோது மணி 11.15 ஆகிவிட்டது .. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு போலீஸ் இல்லை .. எனக்கு ரொம்ப கோபம் வந்து விட்டது .. அவருக்கு போன் செய்தேன் எடுத்தவர் இதோ பகதுலதான் இருக்கேன் 5 minutesla வந்துர்வேன்பா என்றார் .. 10 நிமிடம் ஆகியும் அவர் வரவில்லை .

மறுபடியும் அவருக்கு போன் செய்தேன் ஆனால் அவர் எடுக்கவே இல்லை .. எனக்கு தெரிந்து அன்று நான் திட்டிய அளவுக்கு தமிழ் நாட்டு போலீசை இது வரை யாரும் திட்டி இருக்க மாட்டார்கள் .. அவரிடமிருந்து எனக்கு போன் வந்தது என்னால வர முடியலப்பா நீ திரிய receptionla குடுத்துடுப்பா நா collect பண்ணிக்கிறேன் என்றார் . டைரியை கொண்டு போய் குடுத்து விட்டு வாட்சை பார்த்தேன் மணி 12 அடித்தது . என் நண்பனிடம் இருந்து interview over என்று ஒரு மெசேஜ் வந்துச்சு . தலையில் கையை வைத்து கொண்டு கண்ணை மூடி கொண்டு அங்கிருந்த chairil உட்காந்தேன் .அப்பாக்கும் அம்மாக்கும் என்ன பதில் சொல்ல போறேன் .மாசம் 20000 சம்பலமாச்சே எங்க குடும்பத்தோட கஷ்டமெல்லாம் தீர்ந்திருகுமே .. நா செஞ்சதுக்கு இப்ப இந்த உலகம் எனக்கு என்ன சிலையா வைக்க போகுது .. கேக்குறவன் என்ன இழுச்ச வாயனுதான சொல்லுவான் , இல்ல உனக்கு எதுக்கு இந்த ஹீரோ வேலைலாம்னு சொல்லி சிரிப்பாங்க ........ அமைதியாக உட்கார்ந்திருந்தேன் ..அந்த wardboy அவர general wardku மாத்தியாச்சு என்றார் . சரி என்றேன் .எழுந்து அவரை பார்க்க போனேன் தலை முழுவதும் கட்டு போடபட்டு இருந்தது ...எனக்கு அவரை பார்த்து திட்டுவதா பரிதாப படுவதா என்று புரியாமல் நின்று கொண்டிருந்தேன் .. அந்த அடிபடவரின் மனைவியிடமிருந்து போன் வந்தது இப்ப எப்படிப்பா இருக்கார் என்று கேட்டாங்க ... இனி ஒன்னும் பிரச்சனை இல்ல general wardku மாத்திடாங்கனு சொன்னேன் .. பக்கதுல வந்துடோம்பா இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவோம் அது வரைக்கும் கொஞ்சம் பார்த்துகோப்பா என்றார் ... நானும் வீட்டுக்கு போய் என்ன சொல்றதுன்னு தெரியாம இருந்தேன் , wait பண்றேன் வாங்க என்றேன் ... அவர் பக்கத்தில் கொஞ்ச நேரம் உட்காந்திருந்தேன் பிறகு அந்த hospitela இருந்த கான்டீன்ல டீ குடிக்க போனேன் .. எங்க அம்மாகிட்ட இருந்து போன் வந்தது . என்ன சொல்வதுனு தெரியல call attend செய்யாமல் . அங்கு இருந்த chairil உட்காந்து டீ குடிக்க தொடங்கினேன் . மறுபடியும் என் அம்மாவிடமிருந்து போன் வந்தது என்னால் அடக்க முடியாமல் வெறுப்பில் , முன்னே இருந்த டேபிளில் கை வைத்து முகத்தை மறைத்து படுத்தேன் ..என்னை விட இந்த உலகத்துல பெரிய ஏமாளி இருக்க மாட்டான்னு நெனச்சேன் ... ஏன் அப்பாவிடமிருந்தும் அம்மாவிடமிருந்தும் மாறி மாறி போன் வந்து கொண்டே இருந்தது பாவம் அவங்க நேத்து night fulla எவ்ளோவ் கனவு கண்டிருபாங்க அவர்களை நினைக்கும்போது என் கண்ணிலிருந்து லேசாக கண்ணீர் வந்தது ... அப்படியே தூங்கிவிட்டேன் ... எவ்ளோவ் நேரம் தூங்கினேன் என்று எனக்கே தெரியவில்லை ...........

சார் சார் என்று யாரோ கூபிடுவதுபோல் உணர்ந்தேன் எழுந்து பார்த்த போது அங்கு ward boyum ஒரு 40 வயது மதிக்க தக்க ஒரு பெண்ணும் இரண்டு சிறுமிகளும் வந்திருந்தனர் . அந்த wardboy இவர்தான் இங்கு வந்து அவரை சேர்த்தார் என்று என்னை பார்த்து சொன்னார் , இவங்கதான் அவரோட மனைவி இரண்டு மகள்கள் என்று சொன்னார் .. அந்த அடிபடவரின் மனைவி என் இரு கையையும் பிடித்து நே வயசுல சின்னவனா இருக்க தம்பி இல்லாட்டி உன்னோடு கால விழுந்திருவேன் எங்க வாள்கையவே நீ காப்பாத்தி இருக்க , அந்த மனுஷன நம்பிதான் நாங்க 3 பெரும் இருக்கோம் .. ரொம்ப நன்றிப்பா நீ ரொம்ப வருஷம் நல்லா இருபப்பா என்று கூறிக்கொண்டே அளதொடன்கினால் .. அந்த இரு பெண்களும் ரொம்ப thanks anna என்று கூறிக்கொண்டே இருந்தனர் .. அங்கு canteenil இருந்த அனைவரும் என்னையே பார்த்தனர், அவர்கள் என்னை அப்படி பார்த் போது பெருமையாக இருந்தது .. இதுல என்னமா இருக்கு நீங்க போய் firstu அவர பாருங்க . அவர பாத்துட்டேன்பா உனக்கு நா எப்படி நன்றி சொல்றதுனே தெரியில அந்த ஆண்டவன்தான் உன்னோட ரூபத்துல இங்க வந்திருகாருப்பா ஏதாவது சாப்பிடுப்பா ? என்றால் .. சாப்ட்டேன்மா நீங்க அவர போய் பாருங்க என்றேன் . மணி பாத்தேன் 3.30 மணி ஆனது timaachu நா கிளம்புறேன் என்றேன் , அப்படியாப்பா அவருக்கு குணமான பிறகு உனக்கு போன் பண்றேன்பா நீ கண்டிப்பா வீட்டுக்கு வரணும்பா என்றார் ..அந்த குடும்பம் நான் பைக்கை எடுத்து கொண்டு வெளியே போகும் வரைக்கும் என்னுடனே வந்தனர் ..வண்டியில் உட்காந்து ஸ்டார்ட் செய்து விட்டு கடைசியாக ஒருமுறை திரும்பி வரேன் என்று தலை அசைத்தேன் ..அந்த குடும்பத்தில் இருந்த அனைவரின் கண்களிலும் ஒரு கண்ணீர் கலந்த சந்தோஷம் .. அவருடைய உயிர் அவர்களுக்கு எவ்வளவு முக்கியம் என்று அப்பதான் புரிந்தது, வீட்டுக்கு புறப்பட்டேன் .. மலை வருவதை போன்று இருந்தது மனதிற்குள் இனம் புரியாத சந்தோஷம் அந்த குடும்பத்தினரின் முகங்கள் மனதிற்குள் வந்து வந்து சென்றது , என் கண்களில் சிறிய கண்ணீர் துளி அது வேலை கிடைக்காத சோகத்தினால் அல்ல , அந்த குடும்பத்தினரின் கண்ணில் இருந்த சந்தோஷம் என்னால் என்பதால் ...

இப்போது என் மனதில் வேலை கிடைக்காத சோகம் துளியும் இல்லை .. ஒரு மனுஷன் சக மனுஷனுக்கு இந்த உதவி கூட பண்ணலேனா அவன் நல்லா வாழ்ந்து என்ன பண்ண போறான்னு தோனுச்சு ...... மேகம் இருண்டுகொண்டு வந்தது .. குளிர்ந்த காற்று முகத்தை உரசி சென்றது .. பக்கத்தில் ஒரு டீ கடை ரேடியோவில் "இது ஒரு பொன்மாலை பொழுது ................... " பாடல் ஓடிகொண்டிருந்தது .. நான் காலையில் நினைத்த மாதிரி இன்னிக்கு எனக்கு இந்த மாலை பொழுது ஒரு பொன்மாலை பொழுதுதான் ... நானும் அந்த பாடலை சந்தோஷமாக முனு முணுத்துக்கொண்டே போனேன் ........" இது ஒரு பொன்மாலை பொழுது ............................................................."

- கிஷோர்குமார் .