Monday 4 July 2011

அவளால்....


மெரினா பீச் சென்னையோட மிக பெரிய அடையாளம் எத்தன spencer plaza வந்தாலும் இத அடுச்சுக்க முடியாது .. சந்தோஷமா இருந்தாலும் சரி சோகமா இருந்தாலும் சரி இந்த பீச்சுகுதான் வருவேன் .. எதனயோதடவ friendsodavum தனியாவும் வந்திருக்கேன் ஆனா இன்னிக்கு அவளால அந்த பீச்சே எனக்கு புதுசா தெரியுது .. ஏதோ சினிமா dialogue மாதிரி தோனுதுல , எனக்கு கூட அப்படிதான் தோணுது அனால் அதுதான் உண்மை .......................................................
நா மதுரைல இருக்க ஒரு கிராமத்துல பொறந்து வளந்தவன் சென்னைல இன்ஜினியரிங் படுசுடு இப்ப ஒரு சின்ன companyla படுச்சத்துக்கு கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத ஒரு வேலைய பாத்துகிட்டு இருக்கேன் .. எனக்கு சரியாய் english பேச வராது ஆனால் நா அதுக்காக எப்பவும் வறுத்த பட்டதில்ல அதா கத்துக்கரதுளையும் எனக்கு பெரிய ஆர்வமில்ல அதனால எந்த பெரிய Companylayum எனக்கு வேலை கிடைகள .. english கத்துக்கிடாதான் பெரிய வேலை கெடைக்கும்னு சொன்னாங்க அப்படிப்பட்ட வேலையே எனக்கு வேணாம்னு முடிவு பண்ணுனேன் ... என்ன மாதிரியே இந்த சென்னைக்கு பல்லாயிரம் பேரு கிராமத்துல இருந்து வந்திருக்காங்க அவங்களுக்கெல்லாம் இருக்கின்ற அதே கோபம் இந்த நுனி நாகுல இங்கிலீஷ் பெசுரவங்களையும் , தமிழ் நாட்டுல இருகொம்ட்ரதையே மறந்துட்டு கட்டுப்பாடே இல்லாம அமெரிக்காகாரன் என்ன பண்றானோ அதையே இங்க பண்ணிக்கிட்டு சுத்துரவங்கள பாக்கும்போது எனக்கும் கோபம் வரும் .. எனக்கு இங்கிலீஷ் தெரியதனால ரெண்டு வருஷமா இந்த சென்னைல சும்மாதான் சுத்திகிட்டு இருந்தேன் .. அப்பதான் கன்னிமேரா லைப்ரரில புக் படிக்கற பழக்கம் எனக்கு வந்துச்சு .. முதல்ல நா freeya A .C.ல உட்காரதான் போனேன் ஆனால் அங்க இருந்த புத்தகங்கள படிக்கும்போது எனக்குள்ள ஒரு சந்தோஷம் வந்துச்சு .. அதுக்கபுறம் regulara அங்க போக ஆரம்பிச்சிட்டேன் ........
எனக்கு மாசம் சம்பளம் 7500rubai அதுல வீடு வாடகை சாப்பாடு செலவு பஸ் செலவுன்னு மாசத்துல எனக்கே 5000rubai போய்டும் மீதி இருக்குற 2500rubaila 2000tha ஊருக்கு அமுச்சிடா மீதி 500 ரூபாய்தான் மிஞ்சும் .. சனி ஞாயிறு எனக்கு லீவ் அப எப்பவுமே அந்த லிப்ரர்ய்லதான் இருப்பேன் .. அன்னகி சனிகேலமா போன வாரம் பாதி படுச்ச புத்தகத்த தேடுனேன் ஆனா கேடிகள அங்க இருந்த attender கேட்டப்ப அந்த புத்தகத்த அவங்க படிச்சிக்கிட்டு இருக்காங்கனு கைய காட்டுனாரு .. கூலிங் glassa தலைல மாட்டிகிட்டு கால் மேல கால் போட்டு கிட்டு Kaadhula ஹீட்செட்ட மாட்டிகிட்டு ஒரு கைல cell phona வசுகிட்டு msg அமுசிகிடே இன்னொரு கைல அந்த புத்தகத்த வசிகிடு படுசிடு இருந்தா ... Boy friend வரதுக்கு லேட் aagirukum அது வரைக்கும் make up கலையாம இருகுரத்துகாக உள்ள வந்து சும்மா புக் எடுத்து வச்சுகிட்டு இருக்கா நு தோனுச்சு .. வேற ஒரு புத்தகத்த எடுத்துகிட்டு ஒரு ஓரத்துல உக்காந்து படிக்க ஆரம்பிச்சேன் .. கொஞ்ச நேரத்துல அவ எந்திருச்சு phonela ஏதோ பேசிகிட்டே வெளிய போனா ... அப்பாட சனியன் போய்டுச்சுன்னு நெனச்சு அந்த புத்தகத்த எடுத்து நா விட்டதுல இறந்து படிக்க ஆரம்பிச்சேன் .. திடீர்னு கொஞ்ச நேரத்துல அவ உள்ள வந்து அந்த புத்தகத்த காணம்னு தேடுன அப்பறம் அந்த attenderta பொய் கேட்டா . . உடனே நானே அந்த புத்தகத்த எடுத்துட்டு பொய் கொடுத்துட்டு , சாரி நீங்க போயடிங்கனு நெனச்சேன் அதான் புத்தகத்த எடுதுகிட்டேனு சொன்னேன் .. அவ its ok நு சிரிசிகிடே சொல்லிட்டு போய் படிக்க ஆரம்பிச்ச நானும் போய் வேற புத்தகத்த படிக்க ஆரம்பிச்சேன் .. அவ அந்த புத்தகத்த படுச்சு முடுச்சப்புரம் என்னோட tableke வந்து அந்த புத்தகத்த குடுத்தா நா பதிலுக்கு thanksnu சொன்னேன் .. கதை ரொம்ப நல்லா இருக்கு ஆனா climaxladhan writer சொதபிட்டார்னு சொல்லிடு சிரிச்சிட்டு கெளம்பிட்டா .....
அது ஒரு காதல் கதை .. ஒரு பணக்கார பொன்னுக்கும் middle class பயனுக்கும் காதல் வருது வழக்கம்போல அவளோட அப்பா எதிர்ப்பு தெரிவிப்பார் ... வழக்கமான கதைதானாலும் அந்த writer அந்த கதைய அழகா சொல்லி இருப்பாரு .. அனால் கடைசில அந்த middle class paiyan தன்னோட காதல மறந்துட்டு பெதவங்கதான் முக்கியம்னு போய்டுவான் ... அந்த கதைக்கு அந்த முடிவுதான் correcta இருந்துச்சு ... ஒரு middle classoda வாழ்க்கைய பத்தி இவுளுக்கு என்ன தெரியும் அதனாலதான் climax நல்லா இல்லன்னு சொல்லிட்டு போறான்னு எனக்கு தோனுச்சு ... அடுத்தநாள் மறுபடியும் பஸ் புடிச்சு libraryku போனேன் .. கதவ தெறந்து உள்ள போனா அந்த பொண்ணு நேத்து உட்காந்த இடத்துலேயே உக்காந்து ஏதோ புத்தகத்த படுச்சிட்டு இருந்தா . Phona silentla போட மறந்துட்டேன் என்னோட ஊர்ல இருந்து எங்க அம்மா phone பண்ணி இருந்தாங்க உடனே attend பண்ணிட்டு வெளிய போய்து பேசிட்டு வந்தேன் .. திரும்ப கதவ திறந்திட்டு உள்ள வந்தப்ப அவ ரெண்டு puruvaththayum மேல தூக்கி என்னை பாத்து சிரிச்சா நானும் பதிலுக்கு சிரிச்சிட்டு போய் உட்காந்து படிக்கச் ஆரம்பிச்சேன் . . இவ நிஜமாவே படிக்கதான் இங்க வரானு எனக்கு அப்பதான் தோனுச்சு .. மணி 1 ஆச்சு எந்திருச்சு libraryku எதிர்ல இருந்த செட்டிநாடு hotela சாப்பிட போனேன் அங்க ஒரு சாப்பாடு 43 ருபாய் சனிக்கிழமையும் நியாதுகிலமையும் அங்கேதா நா எப்பவும் சாப்டுவேன் .. நா சாப்டுகிட்டு இருக்கும்போதே அவளும் அந்த hotel குள்ள வந்தா .. Ac ரூமை திறந்து அதுக்குள்ள போனா அங்க ஒரு சாப்பாடு ௯௦ருபைநு கேள்வி பட்டிருக்கேன் .. ஆனா எனக்கு 43rubaie அதிகமா தெரியிது ......
சாப்டுட்டு libraryku பக்கத்துல இருக்குற benchla கொஞ்ச நேரம் உட்காந்திருந்துட்டு libraryku போக லிப்ட் காக wait பண்ணிட்டு இருக்கும்போது செண்டு வாசன செமைய அடுச்சுச்சு திரும்பி பாத அந்த பொன்னும் liftkita வந்தா என்ன பாத்து lunch முடுசஆச்சாநு கேட்டா hmmm இப்பதான்னு சொன்னேன் .. Liftkulla போனா பிறகு தமிழ் sectiondhaananu கேட்டேன் அவளும் ஆமானு சொன்ன 3rd floor buttona அமுத்திட்டு கீழ பாத்து கிட்டு இருந்தேன் .. நேத்து கதை fulla படுசிடிங்கலானு கேட்டா .. Hmmm அந்த writer ரொம்ப அழகா எழுதி இருகாரு அந்த கதைக்கு அந்த climaxdhan correctunu சொன்னேன் .. அதை கேட்ட அவளுடைய கண்கள் பெரிதாகி அடி குரலில் கல்யாணம் பண்ண தெய்ரியம் இல்லாதவன் எதுக்கு லவ் பண்ணனும்னு கேட்டா .. Ponnunga காதல கைவிட்டால் அது த்யாகம் பசங்க காதல kaivitta அதுக்கு பேரு துரோகம்மானு கேட்டேன் .. அதுக்கு அவ கிட்ட இருந்து எந்த பதிலும் வரல .. கொஞ்சம் ஓவராத்தான் பேசிடமொன்னு தோனுச்சு .. Liftu door தரன்துச்சு lifta விட்டு வெளிய வந்த அவ என்ன பாத்து உங்களுக்கு நிறைய forward msg வரும் போல இருக்கு அந்த msg எல்லாம் எனக்கும் வந்திருக்குனு சொல்லிட்டு சிரிச்சா எனக்கும் சிரிப்பு வந்திருச்சு .. Library doora tharandhuttu உள்ள போய் உட்காந்து படிக்க ஆரம்பிச்சுட்ட ... நானும் படிக்கச் ஆரம்பிச்சிட்டேன் .. 5maniku தான் library close பண்ணுவாங்க அவ 4manike கெளம்பி poitaa நா 5maniku தான் கெளம்புவேன் ... அடுத்த வாரம் சனி கிழமை library கதவ தேரந்தவுடனே அவ உட்கார இடாத பாத்தேன் ஆனா அந்த idaththula வேற யாரோ உட்கந்திருந்தாங்க .. ஆனா அவளோட scent வாசன அடுச்சுச்சு .. லேடீஸ் sectionla இடமில்லாதனால gents sectionla இருந்த seatla உட்காந்திருந்த ....
வேற எங்கயும் இடமிள்ளதனால அவளுக்கு எதிர்ல இருந்த சீட்லயே உட்கார போனேன் , நா வராத பாத்தவ அன்னிக்கு செஞ்ச மாதிரியே புருவங்கள தூக்கி சிறுசா நானும் சிரிச்சேன்.. ஆனால் அங்க ஷேர் இல்ல வேற எங்கயாவது chair இருக்கானு சுத்தி பாத்தேன் .. அதா பாத்தவள் book shelfku பின்னாடி ஒரு chair இருக்கு அதா எடுதுகங்கனு சொன்னா .. நா அதை போய் எடுத்துட்டு வந்து அவளுக்கு எதிர்லயே உட்காந்துட்டு thanks நு சொன்னேன் அவ பதிலுக்கு சிரிச்சிட்டு படிக்க ஆரம்பிச்சிட .. நானும் படிக்கச் ஆரம்பிச்சேன் ..மணி 12.30 ஆனது அவ booka மூடி வச்சுட்டு கிளம்பிட்ட .. அவ போன பிறகு ரெண்டு நிமிஷத்துல நானும் sappida கிளம்பினேன் .. அவள் அந்த hoteluku வெளியே நின்று கொண்டிருந்தால் அன்று அந்த hotelil ரொம்ப கூட்டமாக இருந்துச்சு .. என்னை பார்த்த அவள் பக்கதுல வேற எதாவது hotel இருக்கானு கேட்டா .. நேர போய் leftla திரும்புனா அங்க ஒரு hotel இருக்கு ஆனால் அங்க நின்னுகிடேதான் சாப்பிடனும் சாபதேல்லாம் கிடைக்காது noodles மாதிரி itemdhan இருக்கும்னு சொல்லிக்கிட்டு இருக்கும்போதே கடைக்குள்ள இருந்தவரு a.c.la ரெண்டு சீட்டு freeya இருக்குனு சொன்னான் .. வெளிய இருந்தவங்க எல்லாருமே familyoda 2peruku மேல வந்திருந்தநல யாரும் உள்ள போகல .. என்ன பாத்து வாங்க போய் சாப்டலாம்னு கூப்பிட்டால் .. மறுக்க முடியாம நானும் போனேன் .. சாப்பிட ஆரம்பிச்சோம் அவ அண்ணா நகர்ல இருக்க girls hostela இருக்றதா சொன்ன .. அப்பா அம்மா கோயம்புத்தூர் irukaradhavum சென்னைல btech i.t. படுசிடு cts ல வேல பாக்குறதா சொன்னா .. நானும் என்ன பத்தி சொன்னேன் .. ஏன் இன்ஜினியரிங் படுச்சிட்டு இந்த வேலை பன்றிங்கனு கேட்டா எனக்கு இங்கிலீஷ் வராது அதனால பெரிய companylalam வேலை தரமாடாங்கனு சொன்னேன் ...
Ungaloda resuma எனக்கு மெயில் பண்ணுங்க எனக்கு தெரிஞ்ச எடத்துல vacancy இருந்தா சொல்றேன்னு சொல்லிட்டு அவளோட மெயில் i.d.ய சொன்னா .. Thanks but எனக்கு அங்கலாம் வேலை கிடைக்கும்னு நம்பிக்கை இல்ல .. எனக்கு இந்த வாழ்கையே போதும் தங்க வீடு இருக்கு , போட dressu , மாசத்துக்கு ரெண்டு படம் , saturday sundayla இந்த library அப்பறம் பீச் இந்த வாழ்கையே எனக்கு சந்தோஷமா இருக்கு .. ஒரே ஒரு வருத்தம்தான் என்னோட அப்பா அம்மா நா காலேஜ் முடுச்சவனே உங்கள மாதிரி ஒரு பெரிய companyla வேல செய்வேன்னு கனவு கண்டாங்க but அவங்களுக்கு என்னால பெருசா வசதி செஞ்சு தர முடியல .. உண்மையா சொல்லனும்ன நா a.c. உட்காந்து சாபிட்றதே இதுதான் முதல் முறை .. அவ ennaiye அமைதியா பார்த்துகொண்டு இருந்தால் .. அவ என்ன நினைகிரானு என்னால கண்டு பிடிக்க முடியல ... இதுவும் forward msgla வந்த dialoguenu நெனசுகாதிங்கன்னு சொன்னேன் .. அதை கேடு அவ சிரிச்சிட்டு எதுவும் பேசாம சாப்பிட்டால் பில் வந்ததும் நான்தான் உங்கள கூப்டேன் அதனால நான்தான் pay பண்ணுவேன்னு சொல்லிட்டு avale காசு குடுத்தால் .. Andha hotelku வெளியே fresh juice விக்கும் , juice குடிகலாமனு கேட்டேன் அவளும் சரின்னு சொன்னா juice வாங்கி குடுசோம் இப்ப naa அதுக்கு காசு கொடுத்தேன் .. திரும்பவும் லிப்ரர்ய்கு போனோம் .. அவ ஒரு புத்தகத்த குடுத்து இந்த புத்தகத்த படிங்க நல்ல இருக்கும்னு சொன்னா . நானும் வாங்கி படுச்சேன் .. அது communist கருத்துகள கொண்ட கதை .. மாலை 5mani ஆச்சு librarya விட்டு வெளிய வந்தோம் கதை ரொம்ப நல்லா இருந்துச்சுனு சொன்னேன் .. உங்களுக்கு பிடிக்கும்னு தெரியும் அதனாலதான் படிக்க சொன்னேன்னு சொல்லிட்டு நேரமாகிடுச்சு bye nu சொல்லிட்டு அவளோட scootera எடுத்துகிட்டு போய்டா ....
அடுத்தநாள் librarykulla போன வுடனே சுத்தி பாத்தேன் .. அவ அதே இடத்துல உட்காந்து படுச்சிட்டு இருந்தா என்ன பாத்ததும் எப்பவும் போல புருவத்த தூக்கி சிரிச்சா நானும் சிரிச்சிட்டு படிக்க ஆரம்பிச்சேன் .. மணி 12.30 ஆகுறதுக்கு முன்னாடியே அவ எடுத்த புத்தகத்த மூடிட்டா book மொக்கைய இருக்குனு சொல்லிட்டு முடுசிடங்கலானு கேட்டா இன்னும் 10 நிமிஷத்துல முடுஞ்சுடும்னு சொன்னேன் .. அவளும் எனக்காக wait பண்ணா நா படுச்சு முடுச்சப்புரம் சாப்பிட போனோம் .. எபவும் அடிக்கிற scent வாசன இன்னிக்கு இல்லாம வேற அடுச்சுச்சு .. உள்ள போய் உட்காந்து பேசிகிட்டே சாப்பிட‌ ஆரம்பிச்சோம் .. Scஎன்ட் மாதிடிங்கலானு கேட்டேன் ஆமா அது தீந்து போச்சு இது வேறனு சொன்னா .. வேர்வை நாதம் வராம இருகரதுக்குதன் scent அடிக்கணும் . ..ஆனால் நீங்க நடந்து வரதுக்கு ஒரு கிலோ மீட்டர் முன்னாடி உங்க scent வாசன வருதுனு சொன்னேன் .. அவ சிரிச்சிட்டு என்னோட scentala பலபேர் பாதிச்சிருப்பாங்க போல இருக்குனு சொன்னா ... திரும்பவும் libraryku போனோம் அன்னகி நா ஒரு புத்தகத்த கொடுத்து நல்லா இருக்கும் படிங்கன்னு சொன்னேன் அது ஒரு கிராமத்து பெண்ணோட கதை .. மணி 5 ஆனா பிறகு இருவரும் கிளம்பினோம் .. கதை ரொம்ப எதார்த்தம இருந்தது இன்னமும் இந்த மாதிரி பெண்கள் கிராமத்துல இருக்காங்களான்னு கேட்டா ஆமானு சொன்னேன் .. Byenu சொல்லிட்டு அவ போய்டா நா பீச்சுக்கு கிளம்பிட்டேன் .. அடுத்த நாள் அவ கிட்ட இருந்து scent வாசனையே வரல .. Scent போட மறந்துடிங்கலானு கேட்டேன் அவ இல்ல கம்மி பண்ணிட்டேனு சொன்னா .. Appaadhaan அவ நா சொல்றதுக்கும் மதிப்பு குடுக்குறா தெரிஞ்சிச்சு .. அன்று என்னுடைய mobile no. கேட்டா நானும் சொன்னேன் அவ phone ல இருந்து எனக்கு missed call கொடுத்துட்டு அதான் அவ no.nu சொன்னா .. அதன் பிறகு தினமும் எனக்கு forward msg அனுப்புவா...........................................
இப்படியே 3 மாசம் போச்சு அவ படிச்ச நல்ல புத்தகத்த எனக்கு குடுப்பா நா படுச்ச நல்ல . புத்தகத்த அவளுக்கு கொடுப்பேன் .. அபாரம் அந்த கதைய பத்தி அவ கருத்த சொல்லுவா naa என்னோட கருத்த சொல்லுவேன் ........................................................................ இன்னக்கி மாலை 5 மணிகப்புரம் அவ அவளோட friends பீச்லதான் இருக்காங்க அவளும் பீச்சுகுதான் போறேன் அதனால அவளோட scooterlaye என்னையும் பிசுக்கு வர sonna.. முதல வேணாம்னு சொன்னேன் ஆனா அவ ரொம்ப வற்புறுத்தி கேட்ட நாலா சம்மதிச்சேன் .. என்னோட வாழ்க்கைல ஒரு பொண்ணு கூட ஸ்கூட்டர்ல போனது அது தான் first time.. Scootera park பண்ணிட்டு பீச்ல கடலை நோக்கி நடந்தோம் .. உங்க friends இன்னும் வரலயான்னு கேட்டேன் .. எனக்கு இப்ப இந்த ஊர்ல இருக்க ஒரே friend நீங்கதான் உங்கள என்னோட வரவைகதான் சும்மா போய் சொன்னேன்னு சொல்லிட்டு சிரிச்சா .. அப்பரம் உங்க கல்யாணம் எப்பனு கேட்டா நா தெரியலன்னு சொன்னேன் .. உங்க கல்யாணம் எப்பனு கேட்டேன் ........ அதுக்கு அவ அதை நீங்கதான் சொல்லனும்னு சொன்னா .. நா எதுவும் பேசாம நின்னேன் அவ நா சொல்றது உங்களுக்கு kettuchaa புரியுதான்னு கேட்டா .. எனக்கு கொழப்பம இருந்துச்சு .. அவ நேரா என்னோட மொகத்த பாத்து கல்யணம் பண்ணிகலாமனு கேட்டா . . என்ன இதுவரைக்கும் ஒரு இருபது வாட்டி பாத்திருப்ப அதுக்குள்ளயே எப்படி முடிவு செஞ்ச , என்ன பத்தி உனக்கு என்ன தெரயும்னு கேட்டேன் .. அதுக்கு அவ நானே உங்க கிட்ட வந்து பேசுனப்ப கூட நீங்க என்கிட்ட என்னோட mobile no.ra கேட்கல , நானே என்னோட mobile no.ra கொடுதபரம் கூட நீங்க எனக்கு ஒரு msgo callo பண்ணி disturb பண்ணதில்ல , இப்ப நானே உங்கள கல்யாணம் பண்ணிகலமனு கேட்டப்புறம் கூட நீங்க இப்படி கேட்கும்போதே நீங்க என்ன ஏமாத்த மாடிங்கனு எனக்கு தெரியும் என்றால் ..................
நான் எதுவும் பேசாமல் குழப்பத்துடன் கடலை நோக்கி பார்த்து கொண்டு நின்றேன் .. அவள் என் முகத்தை பார்த்து இப்ப நா sonnadhellam forward msgla வந்ததுனு nenachuradhinga இதெல்லாம் உங்கள பத்தி என்னோட மனசுல இருக்கிறது என்று சொல்லிவிட்டு அவள் எப்போலோதும் என்னை பார்க்கும்போது செய்வதுபோல் தன்னுடைய புருவத்தை மேல்தூக்கி சிரித்தால்............................. .................................................................................. நானும் சிரித்து விட்டேன் ................................ நேரமாகிடுச்சு நா கிளம்புறேன் என்று கூறிவிட்டு மறுபடியும் அதே போன்று சிரித்து விட்டு சென்றால் ... நான் கடற்கரையில் உட்காந்து கடலையே பார்த்து கொண்டு இருந்தேன்... நா அவளை காதலிகிரநானு தெரியல ................. எத்தனயோவாட்டி இந்த பீச்சுக்கு வந்திருக்கேன் ஆனால் இன்று இந்த பீச்சே எனக்கு புதிதாக தெரிகிறது அவளால்.................................. .....................................................................................................................
- கிஷோர் குமார்

No comments:

Post a Comment